109 மணி நேரம் பரதம் ஆடிய இளைஞர்!
சேலம்:தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த 32 வயது ஸ்ரீதரன் என்ற இளைஞர் தொடர்ந்து 109 மணி நேரம் நடனமாடிசாதனை படைத்துள்ளார்.
வி.ஜட்டியல்லி கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீதரன் பரதநாட்டியக் கலைஞராவார். நடனத்தில் புதிய சாதனை படைக்கதிட்டமிட்டார்.
இதற்காக இடைவிடாமல் பரதம் நாட்டியம் ஆடி சாதனை படைக்க தீர்மானித்தார். இந்த சாதனை நடன நிகழ்ச்சிகடந்த 20ம் தேதி சேலத்தில் தொடங்கியது.
50 பேர் நடன நிகழ்ச்சியை பார்வையிட தனது நடனத்தை ஆரம்பித்தார் ஸ்ரீதரன். இடைவிடாமல் பரதம் ஆடியஅவர் 24ம் தேதி மாலைதான் தனது நடனத்தை முடித்தார். மொத்தம் 109 மணி நேரம் ஆடினார் ஸ்ரீதரன்.
ஸ்ரீதரனின் இந்த சாதனை நிகழ்ச்சியின் போது மொத்தம் 1,468 பாடல்கள் இசைக்கப்பட்டன. இந்த சாதனைநிகழ்ச்சியை மாநில வேளாண்துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் பார்வையிட்டு ஸ்ரீதரனை வாழ்த்தினார்.
இதற்கு முன்பு ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த அருளானந்தம் சுரேஷ் என்பவர் தொடர்ந்து 100 மணி நேரம் பரதம்ஆடி சாதனை படைத்துள்ளார். இது கின்னஸ் சாதனையாகும். தற்போது 109 மணி நேரம் தான் ஆடியுள்ளசாதனையும் கின்னஸ் சாதனையில் இடம்பெறும் என்று நம்பிக்கை தெ>வித்துள்ளார் ஸ்ரீதரன்.
ஸ்ரீதரனக்கு பரதம் மட்டுமல்லாது, புல்லாங்குழல், மிருதங்கம் வாசிக்கவும் தெரியுமாம்.












Click it and Unblock the Notifications