For Daily Alerts
Just In
துபாய் பொது கழிவறையில் இந்தியர் மர்ம சாவு
துபாய்:இந்தியாவைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் ஏஜென்ட் ஒருவர் துபாய் பேருந்து நிலைய கழிவறையில் பிணமாகக்கிடந்தார்.
இந்தியாவைச் சேர்ந்தவர் ஹபீப் ரஹ்மான் (45). ரியல் எஸ்டேட் ஏஜென்ட்டான ரஹ்மான, துபாய் பொதுபோக்குவரத்து நிலைய கழிவறை சுவரில் சாய்ந்து நின்ற நிலையில் மர்மமான முறையில் பிணமாகக்கண்டெடுக்கப்பட்டார்.
மாரடைப்பு காரணமாக அவர் மரணமடைந்திருக்கக் கூடும் என சந்தேகிக்கப்படுகிறது. அவரது உடலைக்கைப்பற்றி போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Comments
Story first published: Tuesday, December 26, 2006, 5:30 [IST]