ஹஜ் விமானத்தில் மயங்கி விழுந்த பெண் பயணி
நாக்பூர்:வங்க தேசத் தலைநகர் டாக்காவிலிருந்து ஜெட்டாவுக்கு ஹஜ் பயணிகளுடன் சென்றவிமானத்தில் பயணம் செய்த பெண்ணுக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டதால் விமானம்அவசரமாக நாக்பூரில் தரையிறக்கப்பட்டது.
இன்று காலை டாக்காவிலிருந்து ஹஜ் பயணிகளுடன் ஜெட்டாவுக்குக் கிளம்பியதுசெளதி அரேபியா ஏர்லைன்ஸ் விமானம். விமானம் இந்திய வான்வெளியில் பறந்துகொண்டிருந்தபோது நூருன்னிஸா என்ற 58 வயது பெண் பயணி திடீரென மயங்கிவிழுந்தார்.
இதையடுத்து நாக்பூர் விமான நிலையத்தில் தரையிறங்க விமானி அனுமதி கேட்டார்.அனுமதி கிடைத்ததைத் தொடர்ந்து நாக்பூரில் விமானம் தரையிறக்கப்பட்டது. அங்குமருத்துவக் குழு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது.
டாக்டர் நீரஜ் பிரசாத் தலைமையிலான குழு அவரை பரிசோதித்தபோது, அந்தப் பெண்பயணி சரியாக சாப்பிடாத காரணத்தால்தான் ரத்தத்தில் குளுக்கோஸ் மற்றும்ஆக்சிஜன் அளவு குறைந்து மயக்கம் ஏற்பட்தாகத் தெரிவித்தார்.
இந்த சிகிச்சைக்குப் பின்னர் விமானம் அந்தப் பெண் பயணியோடு ஜெட்டாவுக்குக்கிளம்பிச் சென்றது.












Click it and Unblock the Notifications