யுஏஇ-பேச்சலர்களுக்கு எச்ஐவி டெஸ்ட் கட்டாயம்
துபாய்:ஐக்கிய அரபு எமிரேட்டில் வசிக்கும் வெளிநாட்டினர் திருமணம் செய்து கொள்வதற்குமுன்பு எச்.ஐ.வி. சோதனை செய்து கொள்ள வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அபுதாபியில் சுகாதாரத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ஐக்கிய அரபுஎமிரேட்டில் வசிக்கும் வெளிநாட்டினர் மற்றும் அரபு எமிரேட் குடிமக்கள் திருமணம்செய்து கொள்வதற்கு முன்பு எச்.ஐ.வி. சோதனை செய்து கொள்ள வேண்டியதுகட்டாயமாக்கப்படுகிறது. இதுதொடர்பான சட்ட மசோதா தயாராகியுள்ளது.
தற்போது, ஐக்கிய அரபு எமிரேட் குடியுரிமை பெற்றவர்கள் மட்டும் எச்.ஐ.வி,எய்ட்ஸ்,ஹெபாடிடிஸ் பி, பால்வினை நோய்களைக் கண்டறியும் சோதனை செய்துகொள்ள வேண்டும் என்பது கட்டாயமாக உள்ளது.
இதை வெளிநாட்டினருக்கும் தற்போது விரிவுபடுத்தியுள்ளோம். இதுதொடர்பானசட்டம் விரைவில் நிறைவேற்றப்படும்.
இந்த நோய்கள் தவிர பரம்பரை நோய்களான தலசீமியா, ரத்த சோகைஆகியவற்றுக்கும் சோதனை செய்து கொள்ள வேண்டியது கட்டாயமாகிறது.
ஐக்கிய அரபு எமிரேட்டில் கடந்த சில ஆண்டுகளாக மேற்கண்ட நோய்கள் அதிகரித்துவருகின்றன. இதைக் கட்டுப்படுத்தவே இந்த கட்டாய சோதனை என்று அந்த அதிகாரிதெரிவித்தார்.
துபாய் பொது கழிவறையில் இந்தியர் மர்ம சாவு
இதற்கிடையே இந்தியாவைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் ஏஜென்ட் ஒருவர் துபாய் பேருந்து நிலைய கழிவறையில் பிணமாகக் கிடந்தார்.
இந்தியாவைச் சேர்ந்தவர் ஹபீப் ரஹ்மான் (45). ரியல் எஸ்டேட் ஏஜென்ட்டான ரஹ்மான, துபாய் பொது போக்குவரத்து நிலைய கழிவறை சுவரில் சாய்ந்துநின்ற நிலையில் மர்மமான முறையில் பிணமாகக் கண்டெடுக்கப்பட்டார்.
மாரடைப்பு காரணமாக அவர் மரணமடைந்திருக்கக் கூடும் என சந்தேகிக்கப்படுகிறது. அவரது உடலைக் கைப்பற்றி போலீஸார் விசாரணைமேற்கொண்டுள்ளனர்.