அத்வானி பிரதமரானால் நாடு நாசமாகும்-லாலு
வாரணாசி:அத்வானியால் பிரதமர் ஆகவே முடியாது. ஒருவேளை தப்பித் தவறி அவர் பிரதமர் பதவிக்கு வந்து விட்டால்நாடு நாசமாய் போய் விடும் என்று மத்திய ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் கூறியுள்ளார்.
வாரணாசியில் செய்தியாளர்களிடம் லாலு பேசுகையில், அத்வானியால் ஒருபோதும் பிரதமர் பதவிக்கு வரவேமுடியாது. ஒருவேளை அவர் பிரதமர் பதவிக்கு வந்து விட்டால் இந்த நாடு நாசமாகப் போவதை யாராலும்தடுக்க முடியாது.
பாஜகவின் மிதவாத முகம் வாஜ்பாய். அடிப்படைவாதிகளின் முகம் அத்வானி. மதச்சார்பற்ற நாடானஇந்தியாவுக்கு அத்வானி போன்றவர்கள் பிரதமராகக் கூடாது.
இந்துத்துவா, அயோத்திப் பிரச்சினை ஆகியவற்றை மீண்டும் பாஜக கையில் எடுத்துள்ளது கண்டனத்துக்குரியது.உத்தரப் பிரதேசத்தில் தேர்தல் வருவதால் அரசியல் ஆதாயத்துக்காக மீண்டும் ராமர் கோவிலை கையில்எடுத்துள்ளனர். ஆனால் மக்கள் அவர்களுக்கு சரியான பாடம் கற்பிப்பார்கள்.
ஒரே ஒரு தடவை சமைக்கக் கூடிய பாத்திரம் போலத்தான் பாஜக. எனவே என்னதான் இந்துத்துவா, அயோத்திப்பிரச்சினையை மீண்டும் கிளப்பினாலும், மீண்டும் ஒருமுறை அந்தக் கட்சியால் ஆட்சி அமைக்க முடியாது.
வரும் உ.பி. சட்டசபைத் தேர்தலில் முலாயம் சிங் யாதவ் ஆட்சியை மிகக் கேவலமாக தோற்கடித்து உ.பி. மக்கள்பாடம் கற்பிக்க வேண்டும்.
ராகுலை முதல்வராக்கலாம்:
ராகுல் காந்தி உ.பி. மாநில அரசியலில் தீவிர ஆர்வம் காட்டுகிறார். கடுமையாக உழைக்கிறார். எனவே உ.பி.சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் முதல்வர் வேட்பாளராக ராகுல் காந்தியை அறிவிக்கவேண்டும். அரசியல் ரீதியாக ராகுல்காந்தி முதிர்ச்சி அடைந்து விட்டார்.
கிழக்கு உ.பியில் பல தொகுதிகளில் எங்களது ராஷ்டிரிய ஜனதாதளம் போட்டியிடும். பிற பகுதிகளில் காங்கிரஸ்கட்சிக்கு ஆதரவு கொடுக்கும் என்றார் லாலு.
அத்வானி பிரதமரா?: சான்ஸே இல்லை-நிதிஷ்
இதற்கிடையே தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் வாஜ்பாய் தான் பிரதமராவார் என பீகார்முதல்வரும் கூட்டணியின் முக்கிய தலைவருமான நிதிஷ் குமார் கூறியுள்ளார். இதன் மூலம் நாடாளுமன்றத்தேர்தலின்போது தன்னை பிரதமர் பதவிக்கு முன் நிறுத்தும் அத்வானியின் திட்டத்துக்கு முதல் பெரிய அடிவிழுந்துள்ளது.
பாஜக கூட்டணியில் உள்ள முக்கிய கட்சி ஐக்கிய ஜனதா தளம். இக் கூட்டணி தான் பிகாரில் ஆட்சி நடத்திவருகிறது. இந் நிலையில் நிதிஷ் குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
தே.ஜ.கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார் என்பது குறித்து சமீபகாலமாக பெரும் சர்ச்சை நிலவுகிறது.கூட்டணியின் ஈடு இணையற்ற தலைவர் வாஜ்பாய் தான்.
இந்தக் கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் வாஜ்பாய் தான் பிரதமர் ஆவார். எனவே தற்போது அந்த இடம்காலியாக இல்லை. காலியிடம் ஏற்பட்டால், அதுகுறித்து சிந்திப்போம் என்றார்.
இதன் மூலம் பிரதமர் பதவிக்குப் போட்டியிடும் திட்டத்தில் இருக்கும் அத்வானிக்கு தனது மறைமுக எதிர்ப்பைநிதிஷ்குமார் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications