சென்னை விமான நிலையத்துக்கு காஞ்சியில் இடம்!
சென்னை:சென்னை சர்வதேச விமான நிலையத்தை விரிவாக்க காஞ்சிபுரம் மாவட்டத்தில் 3 இடங்களை தமிழக அரசுதேர்வு செய்துள்ளது. விமான நிலையத்தின் இரண்டாவது டெர்மினல் இங்கு அமையவுள்ளது.
மீனம்பாக்கம் விமான நிலையம் பல நூறு கோடி செலவில் விரிவாக்கப்படவுள்ளது. இதற்காக 1,457 ஏக்கர்நிலத்தை விமானத்துறை தமிழக அரசிடம் கோரியது.
இதையடுத்து பொழிச்சலூர், கவுல் பஜார், அனகாபுதூர் பகுதிகளில் நிலங்களை கையகப்படுத்த தமிழக அரசுதிட்டமிட்டது. ஆனால், இங்கு ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வசிப்பதால் இடம் கிடைப்பதில் சிக்கல் ற்ேபட்டது.
மேலும் வீடுகளை காலி செய்யவும் அரசிடம் நிலத்தை வழங்கவும் இப் பகுதி மக்கள் எதிர்ப்புத் தெரிவித்துபோராட்டங்கள் நடத்தி வந்தனர். இந் நிலையில் விமான நிலையத்துக்குத் தேவையான நிலத் 2 வாரத்துக்குள்தேர்வு செய்யுமாறு தமிழக அரசை விமானத்துறை நெருக்கியது.
இதையடுத்து சென்னை புறநகர்ப் பகுதிகளில் சில இடங்களை அரசு பரிசீலனை செய்தது. இறுதியில் சென்னையைஒட்டிய காஞ்சிபுரம் மாவட்டத்திற்குள் வரும் 3 இடங்களை தமிழக அரசு தேர்வு செய்துள்ளது.
சென்னையின் மத்திய பகுதியில் இருந்து 60 கி.மீ. தொலைவில் இந்த இடங்கள் அமைந்துள்ளன. சுமார் 600ஹெக்டேர் பரப்பளவு கொண்ட இந்த இடத்தில் மாபெரும் விமான நிலையத்தை உருவாக்க முடியும்.












Click it and Unblock the Notifications