அருவாமனை மீது விழுந்தவர் வயிறு கிழிந்து பலி
சென்னை:குடிபோதையில் அரிவாள் மனை மீது விழுந்த காண்டிராக்டர் வயிறு கிழிந்து பரிதாபமாக இறந்தார்.
சென்னை அருகே மதுரவாயல் பகுதியைச் சேர்ந்தவர் பப்லு. சென்னை துறைமுகத்தில் காண்டிராக்டராக உள்ளார்.இவரது மனைவி பெயர் மல்லிகா. இவர்களுக்கு 3 வயதில் குழந்தை உள்ளது.
சமீபத்தில் சபரிமலைக்குச் சென்று விட்டுத் திரும்பிய பப்லு, நேற்று நன்றாக குடித்து விட்டு வீட்டுக்கு வந்தார்.
சுதி ஏற்றுவதற்காக தனது மனைவியிடம் ஆம்லேட் போட்டுத் தரக் கூறியுள்ளார். மல்லிகாவும் ஆம்லேட் போடவெங்காயம் நறுக்க அரிவாள் மனையை எடுத்து வந்தார்.
அப்போது போதையில் நிலைதடுமாறியபடி வந்த பப்லு அரிவாள் மனை மீது குப்புற விழுந்தார். இதில்அவருடைய வயிற்றின் நடுப் பகுதியில் அரிவாள் மனை குத்தி வயிற்றைக் கிழித்து விட்டது.
இதையடுத்து மல்லிகாவும், பப்லுவின் தாயாரும் வயிற்றுக்குள் சிக்கிக் கொண்ட அ>வாள் மனையை வெளியேஇழுத்துள்ளனர். அப்போது குடல் அறுந்து அரிவாள் மனையோடு வெளியே வந்தது.
இதையடுத்து பப்லுவை ராமச்சந்திரா மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி பப்லுஇறந்தார்.












Click it and Unblock the Notifications