எல்ஜி ஆதரவு மா.செ நீக்கம்-வைகோ அதிரடி
சென்னை:எல்.கணேசன் ஆதரவாளான திருவாரூர் மாவட்ட செயலாளர் தியாக பாரி கட்சிவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டதற்காக மதிமுகவிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ளஅறிக்கையில்,கட்சியின் ஒழுங்கை மீறும் வகையில் தியாக பாரி நடந்து கொண்டதால்,அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் அவர்நீக்கப்பட்டுள்ளார்.
திருவாரூர் மாவட்ட பொருளாளராக முப்பால் நியமிக்கப்பட்டுள்ளார். கட்சியைபலப்படும் பணியில் அவர் ஈடுபடுவார் என்று தெரிவித்துள்ளார் வைகோ.
கையெழுத்து வேட்டை:
இதற்கிடையை மதிமுக பொதுக் குழு உறுப்பினர்களிடம் கையெழுத்து வேட்டைதொடங்கியுள்ளது.
அவைத் தலைவர் பொறுப்பிலிருந்து தன்னை நீக்கியதை எதிர்த்து சென்னைஉயர்நீதிமன்றத்தில் இடைக்காலத் தடை உத்தரவைப் பெற்றுள்ளார் எல்.கணேசன்.இதைத் தொடர்ந்து சேலத்தில் 29ம் தேதி பொதுக் குழு கூடும் எனவும்அறிவித்துள்ளார்.
இதேபோல மதிமுகவின் பொதுக்குழு கூட்டம் ஜனவரி 10ம் தேதி கோவையில்நடைபெறும் என்று வைகோ அறிவித்துள்ளார்.
தான் கூட்டியுள்ள பொதுக் குழுக் கூட்டத்திற்கு வலு சேர்க்கும் வகையிலும், எல்.ஜி.கணேசன் பக்கம் பெரும்பான்மையான பொதுக்குழு உறுப்பினர்கள் இல்லைஎன்பதையும் நிரூபிக்க பொதுக்குழு உறுப்பினர்களிடம் கையெழுத்து வேட்டையைமேற்கொள்ள அவர் உத்தரவிட்டுள்ளார்.
வரும் 28ம் தேதி மாவட்டங்களில் கூட்டப்படவுள்ள மாவட்ட செயல் வீரர்கள்கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர்களிடம் கையெழுத்து பெறப்படவுள்ளது.
கட்சிக்கு விசுவாசமாக இருப்போம். வைகோ எடுக்கும் முயற்சிகளுக்கு துணைநிற்போம், எல்.கணேசன், செஞ்சி ராமச்சந்திரனுக்கு எதிராக எடுக்கப்படும்நடவடிக்கைக்கு துணையாக இருப்போம், கட்சிக்கு களங்கம் ஏற்படும் வகையில்நடந்து கொள்ள மாட்டோம் என்று உறுதியளித்து அதில் கையெழுத்திடுமாறுபொதுக்குழு உறுப்பினர்களிடம் கூறப்படவுள்ளது.
இந்தக் கையெழுத்துக்களை எல்.ஜி, செஞ்சிக்கு எதிராக உயர்நீதிமன்றத்திலும் தாக்கல்செய்ய மதிமுக தலைமை முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
கண்ணப்பனிடம் கணக்கு கேட்டு வழக்கு?:
இதற்கிடையே, மதிமுக பொருளாளர் கண்ணப்பனிடம் கணக்கு கேட்டு தென்சென்னை மாவட்ட பொருளாளர் ரவி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரதிட்டமிட்டுள்ளார்.
எல்.ஜி. ஆதரவாளரான ரவி, கட்சியின் வரவு செலவுக் கணக்கை கண்ணப்பன் காட்டவேண்டும் என்று கோரி விரைவில் வழக்கு தாக்கல் செய்யவுள்ளார்.
எல்ஜி-கோ.சி மணி சந்திப்பு:
இந் நிலையில் சஸ்பெண்ட் மதிமுக அவைத் தலைவர் எல்.கணேசன் நேற்று காலை கும்பகோணத்தில் கூட்டுறவுத்துறைஅமைச்சர் கோ.சி.மணியை சந்தித்து ரகசிய ஆலோசனை நடத்தினார்.
கும்பகோணத்தில் உள்ள தனது எம்.எல்.ஏ. அலுவலகத்தில் வைத்து கணேசனை சந்தித்தார் மணி. ஒரு காலத்தில் தஞ்சாவூர்மாவட்ட திமுகவில் ஒருவருக்கு எதிராக ஒருவர் கோஷ்டி அரசியல் நடத்தியவர்கள் இந்த இருவரும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications