பக்ரீத்-குர்பானிக்காக ஒட்டகம் வெட்ட தடை!
சென்னை:பக்ரீத் பண்டிகையையொட்டி தமிழகத்தில் குர்பானி கொடுப்பதற்காக ஒட்டகங்களை பலியிடுவதற்கு சென்னைஉயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
பக்ரீத் பண்டிகை ஜனவரி 1ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதற்காக ஆடு, மாடுகளை குர்பானி பலியாககொடுப்பது வழக்கம். அதே போல ஒட்டகங்களும் பலி கொடுக்கப்பட்டு வருகின்றன.
இந் நிலையில் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம் 8 ஒட்டகங்களை சென்னைக்குக் கொண்டு வந்துள்ளது.வண்ணாரப்பேட்டை கிழக்கு கல்லறை சாலை பகுதியில் உள்ள மசூதியில் இந்த ஒட்டகங்கள் வைக்கப்பட்டுள்ளன.தமிழகம் முழுவதும் மொத்தம் 92 ஒட்டகங்கள் குர்பானியாக கொடுக்கப்படவுள்ளதாக தமுமுக தொண்டர்அணிச் செயலாளர் முகம்மது ரஃபி கூறியுள்ளார்.
ரஃபி கூறுகையில், கடந்த 3 ஆண்டுகளாகத்தான் இங்கு ஒட்டகங்கள் குர்பானியாக கொடுக்கப்படுகின்றன.ஆந்திராவிலிருந்து ஒரு ஒட்டகம் ரூ. 30,000 என விலை கொடுத்து 8 ஒட்டகங்களை 2 லாரிகளில் கொண்டுவந்தோம்.
ஆந்திர மாநிலத்தில் ராஜஸ்தான் ஒட்டகங்கைள கொண்டு வந்து சந்தை போல நடத்துகிறார்கள். அதேபோல அரசுஅனுமதியுடன் அடுத்த ஆண்டு சென்னையிலும் ஒட்டக சந்தை நடத்தத் திட்டமிட்டுள்ளோம் என்றார்.
ஆனால், பாரதீய பிராணிகள் நல சங்கம் சார்பில் ஒட்டகங்களை பலியிட தடை விதிக்கக் கோரிஉயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை இன்று விசாரித்த உயர்நீதிமன்றம், ஒட்டகங்கள்உரிய அனுமதி இல்லாமல் கொண்டு வரப்பட்டுள்ளதால் அவற்றை வெட்டுவதற்கு இடைக்காலத் தடை விதித்துஉத்தரவிட்டது.