பிச்சைக்காரரை கொடூரமாய் கொன்ற வாலிபன்
மதுரை:வயதான பிச்சைக்காரரை மிதித்து, சுவரில் தூக்கி வீசி கொடூரமாக கொலை செய்துவிட்டு அவர் வைத்திருந்த 71 ரூபாய் பணத்தை திருடிய மிருக மனிதனைஅப்பகுதியைச் சேர்ந்த இருவர் வளைத்துப் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.
மதுரை பாலரங்காபுரம் பகுதியில் 70 வயது மதிக்கத்தக்க ஒரு முதியவர்நீண்டகாலமாக சாலையோர பிளாட்பாரத்தில் படுத்தபடி பிச்சை எடுத்து வந்தார்.
இந் நிலையில் காமராஜர்புரம் சந்தன மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தமுருகேசன் (20) என்பவன் பிச்சைக்காரர் இருந்த இடத்திற்கு நேற்று இரவு 11மணியளவில் வந்தான்.
அந்த முதியவரை காலால் எட்டி உதைத்த முருகேசன், அவர் வைத்திருந்தநாணயங்களை (71 ரூபாய்) பறிக்க முயன்றான். ஆனால் அவனுடன் முதியவர்போராடிப் பார்த்தார்.
இதனால் கோபமடைந்த முருகேசன், முதியவரை சரமா>யாக மிதித்தான். அப்படியும்ஆத்திரம் அடங்காமல் அந்த பரிதாபத்துக்குரிய முதியவரை தூக்கி சுவரில் வீசிஅடித்தான். இதில் அந்த பெரியவர் அந்த இடத்திலேயே உயிரை விட்டார்.
பின்னர் காசை எடுத்துக் கொண்டு தனது சைக்கிளில் அங்கிருந்து செல்ல முயன்றான்முருகேசன். அப்போது அப்பகுதி வழியாக வந்த பீர் முகம்மது, மாணிக்கம் ஆகியோர்முருகேசனை விரட்டிப் பிடித்து சரமாரியாக உதைத்தனர். பின்னர் அவனை போலீஸில்ஒப்படைத்தனர்.
71 ரூபாய்க்காக முதியவரை ஒரு வாலிபன் படுகொலை செய்த செயல்அப்பகுதியினரை பெரும் ஆத்திரத்தில் ஆழ்த்தியுள்ளது.