5 ஆண்டுக்கு பின் அரசு ஊழியர்களுக்கு போனஸ்
சென்னை:தமிழக அரசு ஊழியர்களுக்குப் பொங்கல் போனஸ் மற்றும் சிறப்பு போனஸைமுதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழக அரசு ஊழியர்களுக்கு போனஸ் வழங்க முதல்வர் கருணாநிதிஉத்தரவிட்டுள்ளார். அதன்படி சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு 30 நாள்ஊதியத்திற்கு இணையான போனஸ் வழங்கப்படும். சி மற்றும் டி பிரிவுஊழியர்களின் சம்பளத்தை ரூ. 2,500 என்று கணக்கிட்டு போனஸ் வழங்கப்படும்.
ஏ மற்றும் பி பிரிவு அலுவலர்களுக்கு சிறப்பு போனஸாக ரூ. 825 வழங்கப்படும்.ஓய்வூதியதாரர்களுக்கு சிறப்புப் பரிசாக ரூ. 150 தரப்படும். சாலைப்பணியாளர்களுக்கு விதிப்படி போனஸ் தர முடியாது என்பதால் அவர்களுக்குகருணைப் பரிசாக ரூ. 825 வழங்கப்படும்.
உள்ளாட்சி நிர்வாகம், அரசு மானியம் பெறும் கல்வி நிறுவனங்களின்அலுவலர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் இதே அளவிலான போனஸ் வழங்கப்படும்.
முழு நேர, பகுதி நேர, தொகுப்பூதியம் பெறுவோர், சத்துணவு ஊழியர்கள், கிராமஉதவியாளர்களுக்கும் சிறப்பு போனஸ் வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார் எனதெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக ஆட்சியில் ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் நிறுத்தி வைக்கப்பட்டதுகுறிப்பிடத்தக்கது.