இலங்கை செல்கிறார் பிரணாப் முகர்ஜி
டெல்லி:மத்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி ஜனவரி முதல் வாரத்தில் இலங்கைசெல்கிறார். இலங்கை இனப் பிரச்சினை குறித்து அதிபர் ராஜபக்ஷேவிடம் அவர்முக்கியமாக ஆலோசிக்கவுள்ளார்.
டெல்லியில் ஏப்ரல் மாதம் 14வது சார்க் மாநாட்டு நடைபெறுகிறது. இதில் கலந்துகொள்ள வருமாறு இலங்கை அதிபர் ராஜபக்ஷேவை அழைப்பதற்காக பிரணாப்முகர்ஜி கொழும்பு செல்கிறார்.
ஜனவரி 8ம் தேதி பிரணாப் முகர்ஜி கொழும்பு செல்லத் திட்டமிட்டுள்ளார். கொழும்புபயணத்தின்போது இலங்கைத் தமிழர் பிரச்சினை, அமைதி பேச்சுவார்த்தையின்அடுத்த கட்டம், யாழ்ப்பாணத்தில் தமிழர்கள் மீதான பொருளாதாரத் தடை உள்ளிட்டமுக்கிய விவகாரங்கள் குறித்து ராஜபக்ஷேவுடன் பிரணாப் முகர்ஜி ஆலோசனைநடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
யாழ்ப்பாணத்தில் தமிழர்களுக்கு உணவு, அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்கவிடாமல் இலங்கை அரசு பொருளாதாரத் தடையை அமல்படுத்தி வருவதற்கு இந்தியஅரசு ஏற்கனவே கவலை தெரிவித்துள்ளது.
இலங்கையில் தமிழர்கள் மீதான தாக்குதல் தீவிரமாகி வரும் நிலையில் பிரணாபின்கொழும்பு பயணம் முக்கியத்துவம் பெறுகிறது.
சார்க் நாடுகளுக்கு நேரில் சென்று அழைப்பு விடுத்து வரும் பிரணாப் முகர்ஜிஏற்கனவே நேபாளம், பூட்டான் ஆகிய நாடுகளுக்குச் சென்றிருந்தார். அடுத்து ஜனவரி13ம் தேதி பாகிஸ்தான் செல்லவுள்ளார்.