லாட்டரி-போலீஸ் மீது ராமதாஸ் பாய்ச்சல்
திண்டிவனம்:தமிழகத்தில் நடந்து வரும் ரகசிய லாட்டரி விற்பனையை காவல்துறை தடுத்துநிறுத்தாவிட்டால் போலீஸாரை எதிர்த்து மாபெரும் போராட்டம் நடத்தப்படும் எனபாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
சமீபகாலமாகவே திமுக அரசுக்கு எதிராக குரல் கொடுக்க ஆரம்பித்துள்ளார் ராமதாஸ்.அந்த வகையில் இன்று திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரத்தில் உள்ள தனதுஇல்லத்தில் செய்தியாளர்களிடம் ராமதாஸ் பேசுகையில்,
தமிழகத்தில் லாட்டரிச் சீட்டு விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால்மாநிலத்தின் பல பகுதிகளில் வெளிமாநில லாட்டரிச் சீட்டுக்கள் ரகசியாக விற்பனைசெய்யப்பட்டு வருகின்றன.
இதுகுறித்து காவல்துறைக்கும் தெரியும். ஆனால் விற்பனையைத் தடுக்காமல்உள்ளனர். காவல்துறையினர் தங்களது கடமையை செய்யாவிட்டால், போலீஸாரைஎதிர்த்து பாமக மாபெரும் போரட்டம் நடத்தும்.
முல்லைப் பெரியாறு அணை பிரச்சினைக்குத் தீர்வு காண மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சி பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் மேற்கொண்டுள்ள முயற்சியை நாங்கள்வரவேற்கிறோம். இந்த சிக்கலை அவர் தீர்த்து வைப்பார் என நம்புகிறோம்.
கூட்டுறவு வங்கிகளில் ரூ. 7,000 கோடி விவசாயக் கடன்களை ரத்து செய்தது போல,தற்போது அனைத்து விதமான கூட்டுறவு வங்கி கடன்களுக்கான வட்டி, அபராதவட்டியையும் குறைத்துள்ளது.
இவற்றையும் முழுமையாக ரத்து செய்து பொங்கல் பரிசாக முதல்வர் அறிவிக்கவேண்டும்.












Click it and Unblock the Notifications