லேத் மிஷனில் தலை சிக்கி பெண் பலி!
சென்னை:சென்னை புறநகரான பாடி அருகே லேத் மெஷினில் துப்பட்டா சிக்கியதில்,இயந்திரத்துக்குள் இழுக்கப்பட்ட பெண்ணின் தலை சிதைந்து பரிதாபமாக இறந்தார்.
பாடி அருகே உள்ள டி.என்.பி. நகர் அருணகிரிநாதன் தெருவைச் சேர்ந்தவர் சேவியர்.இந்தப் பகுதியில் லேத் மெஷின் நிறுவனம் வைத்து நடத்தி வருகிறார். இவரதுமனைவி எஸ்தர் பிரேமா (வயது 29) நேற்று இரவு கணவ>ன் நிறுவனத்துக்குவந்துள்ளார்.
அப்போது அங்கு லேத் மெஷின் ஓடிக் கொண்டிருந்தது. அப்போது எஸ்தர்அணிந்திருந்த சுடிதாரின் துப்பட்டா, லேத் மெஷினில் சிக்கிக் கொண்டது. இதைப்பார்த்த ஊழியர் ஒருவர் வேகமாக மெஷின் சுவிட்ச்சை ஆஃப் செய்தார்.
ஆனால் அதற்குள் எஸ்தர் பிரேமாவின் கழுத்தை இறுக்கியபடி துப்பட்டாமெஷினுக்குள் போய் விட்டது. இதில் எஸ்தரின் தலை நசுங்கி ரத்த வெள்ளத்தில்அவர் மிதந்தார்.
உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால்வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.












Click it and Unblock the Notifications