திமுக வழக்கில் வைகோவுக்கு நீதிமன்றம் சம்மன்
சென்னை:முதல்வர் கருணாநிதி குறித்து அவதூறாகப் பேசியதாக தொடரப்பட்டுள்ள வழக்கில்மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழின்முதன்மை ஆசி>யர், வெளியீட்டாளர் ஆகியோர் ஜனவரி 12ம் தேதி நேரில் ஆஜராகிவிளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு சென்னை எழும்பூர் பெருநகரகுற்றவியல் நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.
மதிமுக உட்கட்சிப் பூசல் தொடர்பாக முதல்வர் கருணாநிதி குறித்து வைகோ கடும்குற்றச்சாட்டுக்களைக் கூறியிருந்தார். இதையடுத்து வைகோ மீதும் அவரது பேட்டியைவெளியிட்ட தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் முதன்மை ஆசிரியர், வெளியீட்டாளர்ஆகியோர் மீது திமுக பொருளாளர் ஆற்காடு வீராசாமி அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
சென்னை எழும்பூர் பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் இந்த வழக்கு இன்றுவிசாரணைக்கு வந்தது. மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிபதி பூதநாதன்,இதுதொடர்பாக வைகோ, எக்ஸ்பிரஸ் ஆசிரியர், வெளியீட்டாளர் ஆகியோர் ஜனவரி12ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு கூறி சம்மன் அனுப்பஉத்தரவிட்டார்.
இதே போல அரசின் சார்பிலும் ஒரு அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளதுகுறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications