புஷ் மகிழ்ச்சி -வாடிகன் கவலை

Subscribe to Oneindia Tamil

கிராபோர்ட்:சதாம் உசேன் தூக்கிலிடப்பட்டிருப்பது ஈராக் வரலாற்றில் முக்கிய வரலாற்று மைல் கல், ஆனால் இதனால்ஈராக்கில் வன்முறை முடிவுக்கு வரும் என்று கூற முடியாது என அமெ>க்க அதிபர் ஜார்ஜ் புஷ் கூறியுள்ளார்.

அதேபோல இங்கிலாந்தும் சதாம் தண்டனையை வரவேற்றுள்ளது.

சதாம் உசேனுக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது குறித்து டெக்ஸாலிருந்து ஜார்ஜ் புஷ் வெளியிட்டஅறிக்கையில், ஈராக் வரலாற்றில் இது ஒரு முக்கிய மைல் கல் ஆகும். ஜனநாயகப் பாதைக்குத் திரும்பிக்கொண்டிருக்கும் ஈராக்குக்கு இது மிகவும் அவசியம் ஆகும்.

சதாம் உசேனை நீதியின் முன் நிறுத்தி தண்டனை கொடுத்ததால் மட்டும் ஈராக்கில் வன்முறை நின்று விடாது எனகூற முடியாது. ஆனால் ஈராக் மக்களுக்கு இது முக்கியமான ஒரு நிகழ்வாகும்.

ஜனநாயக ஆட்சியை தங்களது விருப்பம் போல அமைத்து, அதை நிர்வகித்து, தங்களைத் தாங்களே பாதுகாத்துக்கொள்ள தற்போது வழி பிறந்துள்ளது என்று கூறியுள்ளார் புஷ்.

இங்கிலாந்து வரவேற்பு:

சதாம் தூக்கிலிடப்பட்டது குறித்து இங்கிலாந்து வெளியுறவு அமைச்சர் மார்கரெட் பெக்கெட் கூறுகையில், ஈராக்மக்களுக்கு இழைத்த குற்றத்திற்கான தண்டனை சதாமுக்குக் கிடைத்துள்ளது.

சதாம் உசேன் ஈராக் நீதிமன்றத்தில் விசா>க்கப்பட்டு அவருக்குத் தண்டனை தரப்பட்டுள்ளது. இதை நான்வரவேற்கிறேன். ஈராக் மக்களுக்கு சதாம் இழைத்த பல குற்றங்களில் சிலவற்றுக்குத் தண்டனை கிடைத்துள்ளது.அதை தற்போது அவர் சந்தித்துள்ளார்.

இங்கிலாந்து மரண தண்டனையை எதிர்க்கும் ஒரு நாடு. ஈராக்கில் மட்டுமல்ல உலகின் எந்தப் பகுதியிலும் மரணதண்டனை இருக்கக் கூடாது என இங்கிலாந்து விரும்புகிறது. மரண தண்டனையை ஒழிக்க வேண்டும் எனஇங்கிலாந்து விரும்புகிறது. இதை ஈராக் அரசிடமும் நாங்கள் தெளிவாக தெ>வித்திருந்தோம்.

இருப்பினும் ஈராக் ஒரு சுதந்திர நாடு. அந்த நாட்டு முடிவை நாங்கள் மதிக்கிறோம். ஈராக் தொடர்ந்து பலசவால்களை சந்தித்து வருகிறது. தற்போது பல கட்சிகள் இணைந்த ஜனநாயக அரசு அமைந்துள்ளது.

ஈராக் அரசுடன் நாங்கள் தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்கி செயல்படுவோம். ஈராக் வளம் பெறவும், அந்நாட்டுமக்கள் பாதுகாப்பாக வாழவும் இங்கிலாந்து துணை நிற்கும் என்றார் பெக்கெட்.

ஈராக் மீதான போரில் அமெரிக்காவின் மிக முக்கிய கூட்டாளியாக இங்கிலாந்து விளங்கியது. ஈராக்கில் 7,200இங்கிலாந்து வீரர்கள் இன்னும் நிலை கொண்டுள்ளனர் என்பது நினைவிருக்கலாம்.

வாடிகன் கவலை:

சதாம் உசேன் தூக்கிலிடப்பட்ட செயலுக்கு கத்தோலிக்க மதத்தினரின் புனித தலைமையகமான வாட்டிகன் ஏமாற்றமும், கவலையும் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வாடிகன் சபை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், இது மிகவும் சோகமான ஒரு சம்பவம். இதன் மூலம் பழிவாங்கும் செயல்கள்அதிகரிக்கும். புதிய பிரச்சினைக்கு இப்போது வித்திடப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

லிபியா 3 நாள் துக்கம்:

சதாமின் தூக்கு தண்டனையை அடுத்து 3 நாள் துக்கம் அனுசரிப்பதாக லிபியா அறிவித்துள்ளது.

லிபிய அதிபர் கடாபி கூறுகையில், பகரீத் கொண்டாட்டங்களை ஒத்திவைத்துவிட்டு இந்த துக்கம் அனுசரிக்கப்படும் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+