கஞ்சா, பெண்கள்-பிஞ்சில் பழுத்த கோகுல்!
சென்னை:சென்னை மாணவன் அரவிந்த் படுகொலை செய்யப்பட்டதற்கு முதல்வர் கருணாநிதிஅதிர்ச்சியும், இரங்கலும் தெரிவித்துள்ளார். அவரது குடும்பத்திற்கு ரூ. 1 லட்சம்நிதியுதவி அளிக்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:சென்னை சாலிகிராமத்தைச் சேர்ந்த கார்த்திகேயன், அமுதா தம்பதியின>ன் ஒரே மகன்,11 வயதுடைய அரவிந்த் விளையாட்டு என்ற பெயரால் அழைத்துச் செல்லப்பட்டுஅவரது நண்பர்களாலேயே கொடூரமாக கொலை செய்யப்பட்ட நிகழ்வு அனைவரதுஉள்ளத்தையும் வருத்திடும் செயலாகும்.மகனை இழந்து வாடும் அவனது பெற்றோர்களுக்கம், உறவினர்களுக்கும் தமதுஆழ்ந்த இரங்கலை முதல்வர் கருணாநிதி தெரிவித்துக் கொள்வதோடு, அரவிந்தின்பெற்றோருக்கு பரிவு நிதியாக முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து ரூ. 1 லட்சம்வழங்கிட அனுமதித்துள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.இதற்கிடையே, கோகுலுக்கு 16வயதே ஆனாலும் அவனிடம் அயோக்கியத்தனங்கள்எக்கச்சக்கமாக இருந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.இதுகுறித்து போலீஸாரிடம் அவன் கூறுகையில், எனக்கு புகை பிடிக்கும் பழக்கம்உண்டு. கஞ்சாவும் புகைப்பேன். நானும், எனது நண்பர்களும் அடிக்கடி கூடி மதுஅருந்துவோம்.மது பழக்கம் வந்தது முதல் எங்களுக்கு பெண்கள் தொடர்பும் ஏற்பட்டது. எனதுநண்பன் பிரவீன் சினிமாவின் நடனமாடி வந்தான். அவனது தாயார் அழகு நிலையம்வைத்துள்ளார்.அங்கு நாங்கள் அடிக்கடி செல்வோம். அங்கு வேலை பார்க்கும் பெண்களிடம்எங்களுக்கு தொடர்பு ஏற்பட்டது. அவர்களுடன் ஜாலியாக இருப்பேன்.தினமும்> பள்ளி முடிந்த பின்னர் கி>க்கெட் விளையாடுவோம், அதன் பின்னர் இரவுசினிமா பார்க்கச் செல்வோம். அதை முடித்து விட்டு பீர் சாப்பிடுவோம். பிறகுஏதாவது ஒரு பெண்ணுடன் ஜாலியாக இருப்போம்.பல துணை நடிகைகள், விபச்சாரப் பெண்களுடன் எங்களுக்கு தொடர்பு உள்ளதுஎன்று கூறியுள்ளான் பிஞ்சில் பழுத்து வெம்பிப் போன கோகுல்.