பக்ரீத்: ஒட்டகம் வெட்ட உயர்நீதிமன்றம் அனுமதி
சென்னை:பக்ரீத் பண்டிகையன்று ஒட்டகங்களை வெட்டி குர்பானி பலி கொடுக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம்அனுமதி அளித்துள்ளது.
பக்ரீத் பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ஆடு, மாடுகள் குர்பானி பலி கொடுக்கப்படும்.ஒட்டகங்களும் வெட்டி பலி கொடுக்கப்படுவது தற்போது தமிழகத்தில் பரவி வருகிறது.
இதற்கு பாரதிய பிராணிகள் நல வாரியம் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதுதொடர்பாக சென்னைஉயர்நீதிமன்றத்தில் அந்த வாரியம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
இதை விசாரித்த உயர்நீதிமன்ற தனி நீதிபதி ஒட்டகம் பலி கொடுக்க இடைக்காலத் தடை விதித்தார். இதைஎதிர்த்து மீலாது அமைப்புகள், வழக்கறிஞர்கள் சார்பில் உயர்நீதிமன்றத்தில் அவசர மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை நீதிபதிகள் ஜோதிமணி, சந்துரு ஆகியோர் விசாரித்தனர். அப்போது மனுதாரர்கள் சார்பில்ஆஜரான வழக்கறிஞர்கள், மீலாது கடமைகளில் ஒன்று குர்பானி கொடுப்பது. இது மதக் கடமையாகும். இதன்இறைச்சியை யாரும் விற்பதில்லை. தானமாகத்தான் கொடுக்கிறார்கள்.
குரானில் சொல்லப்பட்டபடியே ஒட்டகத்தின் இறைச்சியை ஏழைகளுக்கு தானமாக கொடுக்கிறார்கள். இதைசெய்யாவிட்டால் தங்களது கடமைகளிலிருந்து முஸ்லீம்கள் தவறியவர்களாகி விடுவார்கள். எனவே தடையைவிலக்க வேண்டும் என்று வாதிடப்பட்டது.
தமிழக அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ராஜா கலிபுல்லா வாதிடுகையில், தமிழகத்தில் மத அடிப்படையில்ஆடு, மாடு, ஒட்டகங்களை வெட்ட தடை இல்லை. சென்னை மாநகராட்சி சட்டத்திலும் ஒட்டகத்தை வெட்ட தடைஇல்லை என்றார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தமிழகத்தில் ஒட்டகத்தைப் பலி கொடுக்க விதிக்கப்பட்டஇடைக்காலத் தடை நீக்கப்படுகிறது. எந்தெந்த இடங்களில் ஒட்டங்களை வெட்டலாம் என்பதை மாநகராட்சிஆணையர் ஒதுக்க வேண்டும்.
ஒட்டகங்களுக்கு நோய் ஏதேனும் உள்ளதா என்பது குறித்து சுகாதார அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும்.ஒட்டகங்களை வெட்டுவதன் மூலம் ஆந்த்ராக்ஸ், சுரா போன்ற நோய்கள் பரவும் என்று கூறுவதற்கு அடிப்படைஆதாரம் இல்லை.
வழக்கு விசாரணை மார்ச் முதல் வாரத்திற்குத் தள்ளி வைக்கப்படுகிறது. தமிழக அரசு, மாநகராட்சி, காவல்துறைஆணையர் சார்பில் இதுதொடர்பாக 4 வாரங்களுக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றுஉத்தரவிட்டனர்.