இணையதளத்தில் பெரியாறு கிராபிக்ஸ்: கேரள சில்மிஷம்
தேனி:முல்லைப் பெரியாறு அணை உடைந்து மக்கள் பிணமாக தண்ணீரில் மிதப்பது போன்ற கிராபிக்ஸ் காட்சியைகேரள அரசு தனது இணையதளத்தில் வெளியிட்டு மீண்டும் விஷமப் பிரசாரத்தில் இறங்கியுள்ளது.
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் ஆரம்பத்திலிருந்தே விஷமப் போக்கைக் கடைப்பிடித்து வரும் கேரளஅரசு, முல்லைப் பெரியாறு அணை உடைந்து, தண்ணீர் கிராமங்களை சூழ்ந்து, ஆயிரக்கணக்கான மக்கள்தண்ணீரில் பிணங்களாக மிதப்பது போன்ற கிராபிக்ஸ் சிடியை இடுக்கி மாவட்ட கிராமங்களிடையே உலவச்செய்து பரபரப்பை ஏற்படுத்தியது.
இதற்கு தமிழக அரசு கடும் கண்டனம் தெரிவித்தது. இந்த சிடியை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்போவதாகவும் தமிழக அரசு எச்சரித்தது. இதைத் தொடர்ந்து கிராமங்களில் உலவ விட்ட சிடிக்களை கேரள அரசுவேகம் வேகமாக திரும்பப் பெறப்பட்டது.
ஆனால் தற்போது மீண்டும் தனது விஷமப் பிரசாரத்தை கேரள அரசு தொடங்கியுள்ளது. இந்த முறைஅதிகாரப்பூர்வமாக, தனது மாநில அரசின் இணையதளத்தில் இந்த கிராபிக்ஸ் காட்சிகளை வெளியிட்டுள்ளது.முதல்வரின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ( http://keralacm.gov.in) இது இடம்பெற்றுள்ளதுதான்விஷமத்தனத்தின் உச்சம்.
அணை உடைந்து வண்டிப்பெரியாறு, வல்லக்கடவு கிராம மக்கள் தண்ணீரில் பிணமாக மிதப்பது போன்றகாட்சிகள் இதில் இடம்பெற்றுள்ளன. மேலும் அணை குறித்த பல தவறான தகவல்களையும் கேரள அரசுவெளியிட்டுள்ளது.
கேரள அரசு தனது இணைய தளத்தில் இதுபோல விஷமப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளது விவசாயிகளிடையேபெரும் அதிருப்தியையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளன.












Click it and Unblock the Notifications