சமூக அக்கறையுடன் படம் எடுங்கள்: ராமதாஸ்
சென்னை:சென்னையில் 11 வயது சிறுவன் கொலை செய்யப்பட்டதற்கு சினிமாதான் காரணம் என கைதான சிறுவர்கள்கூறியுள்ளதால், இனிமேலாவது சமூக அக்கறையுடன் திரைத் துறையினர் படம் எடுக்க வேண்டும் என்று பாமகநிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:
சென்னை சாலிகிராமத்தை சேர்ந்த 11 வயது சிறுவன் அரவிந்த்தை கொலை செய்ததாக 3 சிறுவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். மூவரும் தெரிவித்திருக்கும் தகவல்கள் நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது.
சினிமா பாணியில் இந்த கொலை நடந்திருக்கிறது என்று வெளி வந்துள்ள செய்தியிலிருந்து இந்தச் சிறுவர்கள்பிஞ்சில் பழுத்துப் போனதற்கு யார் காரணம் என்பது சொல்லாமலே விளங்குகிறது.
எதிர்கால சந்ததியினரின் நலன் மற்றும் ஒட்டுமொத்த சமூக நலன் கருதி திரைத் துறையினர் இனிமேலாவதுசிந்தித்து செயல்பட வேண்டும். திரைத் துரையினருக்கு சலுகைகளை வாரி வழங்கும் அரசும் அவர்களுக்கள்ளசமுதாயக் கடமைகளை உரிய முறையில் உணர்த்த வேண்டும்.
கொலை நடந்த 48 மணி நேரத்திற்குள் கொலையாளிகளை கைது செய்துள்ளதன் மூலம் தமிழக காவல்துறைதனது பெருமையை தக்க வைத்துக் கொண்டுள்ளது என்று கூறியுள்ளார் ராமதாஸ்.












Click it and Unblock the Notifications