பிரபல நகைக்கடை அதிபர் மனைவியுடன் தற்கொலை
சென்னை:சென்னை தி.நகரில் உள்ள பிரபல உம்மிடி பங்காருச் செட்டி நகைக் கடை அதிபர் உம்மிடி பங்காருச் செட்டி தனதுமனைவியுடன் விஷம் சாப்பிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
தி.நகர் வால்மீகி தெருவில் பங்காருச் செட்டி ஜூவல்லர்ஸ் நகைக் கடை உள்ளது. சென்னை நகரின் மிகவும்பிரபலமான நகைக் கடைகளில் இதுவும் ஒன்று.
இதன் உரிமையாளர் பங்காருச் செட்டி (62), இவரது மனைவி உஷா (56). இவர்களுக்கு நீரஜ்குமார் என்றமகனும், ரேகா என்ற மகளும் உள்ளனர்.
வைகுண்ட ஏகாதசியையொட்டி ஸ்ரீபெரும்புதூருக்கு தனது மனைவியுடன் சென்றார் பங்காருச் செட்டி. அங்குள்ளஆதிகேசவ பெருமாள் கோவிலில் நடந்த சொர்க்காசல் திறப்பு நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டு பெருமாளைவணங்கினார்.
தேவராஜ் என்பவருக்குச் சொந்தமான விடுதி வளாகத்தில் மனைவியுடன் அவர் தங்கியிருந்தார். இந்த நிலையில்நேற்று இரவு பத்து மணியளவில் தனது மனைவியுடன் பங்காருச் செட்டி வாயில் நுரை தள்ளியபடி மாடிப்படிக்கட்டில் பிணமாகக் கிடந்தார்.
இதைப் பார்த்த விடுதி உரிமையாளர் தேவராஜ் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தார். உடனடியாக விரைந்துவந்த போலீஸார் பிணங்களைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
குடும்பப் பிரச்சினை தொடர்பாக பங்காருச் செட்டி தற்கொலை செய்து கொண்டாரா அல்லது அவர்கள் சாப்பிட்டசாப்பாட்டில் விஷம் கலந்திருந்ததா என்பது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பி. அமல்ராஜ் நேரில் சென்று விசாரணை நடத்தினார். பங்காருச் செட்டி மனைவியுடன்இறந்த செய்தி அறிந்ததும் அவர்களது மகன், மகள் மற்றும் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். அனைவரும்ஸ்ரீபெரும்புதூர் விரைந்தனர்.
பங்காருச் செட்டியின் சகோதரர்கள் அனைவரும் நகைத் தொழிலில்தான் ஈடுபட்டுள்ளனர். சென்னை நகரின்பல்வேறு பகுதிகளில் இவர்கள் தனித் தனியாக நகைக் கடைகளை நடத்தி வருகின்றனர்.
தீவிர பெருமாள் பக்தரான பங்காருச் செட்டி, வைகுண்ட ஏகாதசியன்று உயிர் பிரிந்தால் சொர்க்கத்திற்குச்செல்லலாம் என்று கூறப்படும் ஐதீகத்தை நம்பி மனைவியுடன் ஏகாதசி நாளன்று தற்கொலை முடிவைஎடுத்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications