டெல்லியில் குண்டுகளுடன் தீவிரவாதிகள் கைது

Subscribe to Oneindia Tamil

டெல்லி:டெல்லியில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது வெடிகுண்டுகளை நிகழ்த்துவதற்காக பயங்கரவெடிகுண்டுகளுடன் வந்த பாகிஸ்தானின் லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்த 2 தீவிரவாதிகளைபோலீஸார் கைது செய்தனர்.

இதுகுறித்து சிறப்புப் பிரிவு இணை ஆணையர் கர்னால் சிங் கூறுகையில், காஷ்மீரைச் சேர்ந்த, பாகிஸ்தானின்லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்த சமியுல்லா, அலி முகம்மது ஆகிய இருவரையும் டெல்லி ரயில்நிலையத்திற்கு அருகே உள்ள பஹர்கஞ்ச் பகுதியில் வைத்து போலீஸார் வளைத்துப் பிடித்தனர்.

இவர்களிடம் சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் இருந்தது தெரிய வந்தது. பஹர்கஞ்ச் மார்க்கெட்டில் இந்தவெடிகுண்டுகளை வைக்க இவர்கள் திட்டமிட்டிருந்தனர்.

ஜம்முவிலிருந்து சென்னை செல்லும் அந்தமான் எக்ஸ்பிரஸில் இவர்கள் இருவரும் பயணித்தனர். இந்த ரயில்டெல்லி நிலையத்தில் அரை மணி நேரம் நிற்கும். அந்த சமயத்தில் இறங்கி மார்க்கெட்டில் குண்டு வைத்து விட்டுஅதே ரயிலில் செல்ல அவர்கள் திட்டமிட்டிருந்தனர்.

சரியான சமயத்தில் போலீஸார் இவர்களை கைது செய்து விட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.இவர்கள் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து ரயில் நிலையம் முழுவதும் தீவிரமாக சோதனையிடப்பட்டது.ரயில் நிலையம் அருகே உள்ள பகுதிகளிலும் தீவிர சோதனை நடத்தப்பட்டது.

பம்பா: வெடிபொருளுடன் மர்ம நபர் கைது

இதற்கிடையில் கேரள மாநிலம் பம்பாவில் வெடிகுண்டுடன் திரிந்த ஒரு நபரை போலீஸார் வளைத்துப் பிடித்துக்கைது செய்தனர்.

சபரிமலையின் அடிவாரத்தில் இருப்பது பம்பா. இங்கு நேற்று கேரள மாநிலம் சேர்த்தலா, பள்ளிப்புரம் பகுதியைச்சேர்ந்த பனப்பரம்பில் ரவீந்திரன் என்பவர் வெடிபொருட்களுடன் உலவிக் கொண்டிருந்தார்.

சந்தேகத்தின் பேரில் அவரை போலீஸார் பிடித்து விசாரித்தபோது அவரிடமிருந்து 20க்கும் மேற்பட்ட பட்டாசுகள்மற்றும் வெடிபொருட்கள் சிக்கின. இதையடுத்து அவரை போலீஸார் கைது செய்து வழக்குப் பதிவு செய்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+