பாக்தாத்: 16 இடங்களில் குண்டுவெடிப்பு-பலர் பலி
பாக்தாத்:ஈராக் தலைநகர் பாக்தாத்தில் இன்று அதிகாலை அடுத்தடுத்து 16 இடங்களில் குண்டுவெடிப்பு நடந்தது. இதில் பலர் பலியானதாக கூறப்படுகிறது. குண்டுவெடிப்பால்பாக்தாத் நகர் முழுவதும் ஒரே புகை மண்டலமாக இருக்கிறது.
சதாம் உசேன் தூக்கில் போடப்பட்டதை எதிர்த்து அவரது ஆதரவாளர்கள்வன்முறையில் குதித்துள்ளனர். சதாம் தூக்கில் போடப்பட்ட சில மணி நேரத்தில் ஷியாபிரிவினர் அதிகம் வசிக்கும் குஃபா நகரில் நடந்த கார் குண்டுவெடிப்பில் 60க்கும்மேற்பட்டோர் பலியாயினர்.
இந்த நிலையில் இன்று அதிகாலை மத்திய பாக்தாத்தில் அடுத்தடுத்து 16 குண்டுவெடிப்புகள் நடந்துள்ளன. இதனால் பாக்தாத் நகரமே கலங்கிப் போனது. இந்தகுண்டுவெடிப்பு குறித்து இதுவரை விரிவான தகவல் ஏதும் இல்லை.
அடுத்தடுத்து நடந்த இந்த குண்டுவெடிப்பால் பல கார்கள், கட்டடங்கள் தீப்பிடித்துஎரிந்தன. நகரமே புகை மண்டலமாக காணப்பட்டது. குண்டு வெடிப்புடன், ராக்கெட்மற்றும் ஏவுகணைத் தாக்குதலும் நடந்துள்ளது.
இந்த சம்பவங்களில் ஏராளமான பேர் பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.சாவு எண்ணிக்கை மற்றும் சேத விவரத்தை ஈராக் அரசு வெளியிடவில்லை.
பாங்காக் குண்டுவெடிப்பு: 2 பேர் பலி
இதற்கிடையில் புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த தாய்லாந்து தலைநகர் பாங்காக், அடுத்தடுத்துநடந்த ஆறு குண்டுவெடிப்புகளால் அதிர்ந்து போனது. இதில் 2 பேர் பலியானார்கள். பல வெளிநாட்டினர் இதில்படுகாயமடைந்தனர்.
நேற்று இரவு பாங்காக் நகரம் முழுவதும் புத்தாண்டை வரவேற்க பாங்காக் வாசிகளும், வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளும் அதிக அளவில் குவிந்திருந்தனர். கொண்டாட்டங்கள் களை கட்ட ஆரம்பித்திருந்தன.
இந்த நிலையில், சென்டிரல் வேர்ல்டு பிளாசா என்ற இடத்தில் உள்ள வர்த்தக வளாகப் பகுதியில் அடுத்தடுத்துஇரண்டு குண்டுவெடிப்புகள் நடந்தன.
இதையடுத்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகளும் அங்கிருந்து தப்பிஓடினர். இதில் ஒரு வெளிநாட்டுப் பயணி துண்டிக்கப்பட்ட காலுடன் ஓடியதைக் காண முடிந்தது.
இந்த இடத்தில் நடந்த குண்டுவெடிப்பில் 2 பேர் பலியானார்கள். இதேபோல கோவா சரான் உள்ளிட்டஇடங்களிலும் அடுத்தடுத்து நான்கு குண்டுவெடிப்புகள் நடந்தன. இந்த குண்டுவெடிப்புகள் புத்தாண்டு பிறந்தஅடுத்த அரை மணி நேரத்தில் நடந்தன.
குண்டுவெடிப்புகளைத் தொடர்ந்து புத்தாண்டு கொண்டாட்டத்தை பாங்காக் போலீஸார் ரத்து செய்யஉத்தரவிட்டனர். போலீஸாருடன், ராணுவத்தினரும் மீட்பு மற்றும் நிவாரணப் பணியில் ஈடுபட்டனர்.
தாய் இஸ்லாமிய தீவிரவாதிகள்தான் குண்டுவெடிப்புகளுக்குக் காரணமாக இருக்கலாம் என போலீஸார்சந்தேகிக்கின்றனர். கடந்த 3 ஆண்டுகளாக இவர்கள் தனி நாடு கோரி போராடி வருகின்றனர்.
தாய்லாந்தில் சில மாதங்களுக்கு முன்புதான் பிரதமர் சினவத்ரா ஆட்சி கவிழ்க்கப்பட்டு ராணுவம் ஆட்சியைக்கைப்பற்றியது என்பது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications