அதிமுக: கோகுல இந்திரா போய் வளர்மதி
சென்னை:அதிமுக மகளிர் அணி செயலாளராக மீண்டும் வளர்மதி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து அதிமுக பொதுச் செயலளார் ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையில்,
![]() |
அதிமுக மகளிர் அணி செயலாளர் பொறுப்பில் வகித்து வந்த கோகுல இந்திரா எம்பி, அதில் இருந்து நீக்கப்பட்டுஅதிமுக அமைப்பு செயலாளர் பொறுப்பிலும்,
இலக்கிய அணி செயலாளர் பொறுப்பில் வகித்து வந்த வளர்மதி அதில் இருந்து நீக்கப்பட்டு அதிமுக மகளிர்அணி செயலாளர் பொறுப்பிலும், இலக்கிய அணி துணை செயலாளர் பொறுப்பில் இருந்து வரும் வைகைசெல்வன் அதிலிருந்து நீக்கப்பட்டு இலக்கிய அணி செயலாளர் பொறுப்பில் இன்று முதல் நியமிக்கப்படுகிறார்கள்என கூறியுள்ளார்.
முன்னதாக புத்தாண்டு தினத்தையெட்டி ஜெயலலிதா முன்னிலையில் புதுச்சேரி மாநில பாமக, தேமுதிகவைச் சேர்ந்த 500பேரும், திருநெல்வேலி மாவட்ட காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 500 பேரும், மதுரை மாவட்ட திமுக, காங்கிரஸ் கட்சிகளில்இருந்து 500 பேரும் அதிமுகவில் இணைந்தனர்.
புத்தாண்டு தினத்தையொட்டி கட்சி அலுவலகத்துக்கு வந்த ஜெயலலிதாவுக்கு உற்சாகமாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர் மாஜி மந்திரிகள் ஓ.பன்னீர்செல்வம், ஜெயக்குமார், செ.மா.வேலுச்சாமி மற்றும் எம்எல்ஏக்கள் எஸ்.வி.சேகர், சேகர்பாபு,கலைராஜன் மற்றும் பாலகங்கா, ஆதிராஜாராம் ஆகியோர் ஜெயலலிதாவின் காலில் விழுந்து உருண்டு புத்தாண்டு வாழ்த்தைதெரிவித்து அம்மாவிடம் ஆசி பெற்றனர்.













Click it and Unblock the Notifications