தானாகவே உடைந்த மதிமுக: கருணாநிதி
சென்னை:போட்டி பொதுக் குழுவால் மதிமுக இரண்டாக உடைந்து விட்டது என முதல்வர்கருணாநிதி கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
துரோகத்தின் சின்னங்களாக, நன்றி மறந்திட்ட பிறவிகளாக, ஏறிய ஏணியை எட்டிஉதைக்கும் தன்னல வடிவங்களாக, சாப்பிட்ட கை காய்வதற்குள் சாப்பாடு போட்டவீட்டிலேயே சதி வேலை நடத்தும் சண்டாளர்களாக, திரிந்து கொண்டு இருக்கிறார்கள்ஒரு கூட்டத்தினர்.
ஏதோ தாங்கள் அமைத்துள்ள பாசறைக்குள் திமுக புகுந்து குழப்பம் விளைவித்து ராமலட்சுமணர்களைப் போல இருந்த சகோதர்களையும், பஞ்ச பாண்வர்களை போலபண்பான உடன் பிறப்புக்களையும் கொண்டிருந்து மாண்பு நிறைந்த அவர்தம்மாளிகையை மண் மேடாக்க திமுக திட்டம் போட்டிருப்பதாக செய்தி வெளியிட்டுஅய்யோ சூய்யோ என்று அலறித்தவித்தார்கள்.
ஆனால் நமது முயற்சி எதுமில்லாமலே, அப்படியொரு முயற்சி செய்யவேண்டுமென்று நாம் எண்ணிடாமலே, நானூறு பொதுக்குழு உறுப்பினர்களுடன்நாங்கள் அந்தக் கட்சியிலிருந்து வெளியேறி விட்டோம் என்று கணக்குகாட்டிவுள்ளார்கள்.
எல்.கணேசனும், செஞ்சி ராமச்சந்திரனும் ஏற்கனவே திமுகவில் அண்ணாவின்தம்பிகளாய், அழுத்தம் குலையா அடலேறுகளாய் இருந்தவர்கள். அவர்களின்பிரிவால் அவர்கள் தோற்றுவித்த கட்சி இரு பிளவாக ஆகிவிட்ட நிலை, சேலத்தில்அந்த கோலத்தை அனைவரும் காண முடிந்தது என அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications