4.6 லட்சம் பிளஸ்-1 மாணவர்களுக்கு சைக்கிள்
சென்னை:பிளஸ் 1 பயிலும் மாணவ, மாணவிகள் 4.60 லட்சம் பேருக்கு அடுத்த வாரம் இலவச சைக்கிள் வழக்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 படிக்கும் ஆதி திராவிட, பழங்குடியின மாணவிகளுக்கு இலவச சைக்கிள்வழங்கும் திட்டம் கடந்த 2001ம் ஆண்டு ஜெயலலிதாவின் ஆட்சியில் தொடங்கப்பட்டது.
2005ம் ஆண்டு பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 படிக்கும் அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் இலவச சைக்கிள்வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தை தொடர்ந்து நடைமுறைபடுத்தி வருகிறது அடுத்து வந்ததிமுக அரசு.
இந்த ஆண்டு பிளஸ் 1 படிக்கும் 4.60 லட்சம் மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கப்படுகிறது.
இதற்கான டெண்டர் கடந்த மாதம் 17, 18 ஆகிய தேதிகளில் விடப்பட்டது. இதைத் தொடர்ந்து சைக்கிள்கள்கொள்முதல் செய்யப்பட்டன. கொள்முதல் செய்யப்பட்ட 4.60 லட்சம் சைக்கிள்கள் சென்னை, கோவை, திருச்சிமற்றும் மதுரை ஆகிய 4 மண்டலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இங்கிருந்து அனைத்து மாவட்டங்களுக்கும் சைக்கிள் வழங்கப்படும். பின்னர் மாவட்ட கல்வி அலுவலகங்கள்மூலம் அனைத்து மேல்நிலைப் பள்ளிகளுக்கும் சைக்கிள்கள் அனுப்பப்பட்டு அனைத்து பிளஸ் 1மாணவ-மாணவிகளுக்கு பிற்பட்டோர் நலத்துறை மூலம் சைக்கிள் வழங்கப்படும்.
இந்த ஆண்டு இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தை அமைச்சர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம் தொடங்கிவைக்கிறார். அதை தொடர்ந்து அனைத்து பள்ளிகளிலும் பிளஸ் 1 மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள்கள்வழங்கப்படும். இதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications