இந்தோனேசிய விமானம் விழுந்து 90 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

ஜகார்தா:இந்தோனேசியாவில் 102 பேருடன் சென்ற பயணிகள் விமானம் தரையில் விழுந்துநொறுங்கியதில் 90 பேர் பலியாயினர். 12 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர்.

ஆடம் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான அந்த போயிங்-747 விமானம்இந்தோனேசிய நேரப்படி நேற்று பிற்பகல் 1 மணிக்கு சுராபயா என்ற நகரிலிருந்துஜாவாவில் உள்ள மனேடோ நகருக்குக் கிளம்பியது.

2 மணி நேரத்தில் அந்த விமானம் மனோடோவுக்கு வந்திருக்க வேண்டும். ஆனால்குறிப்பிட்ட நேரத்தைத் தாண்டியும் விமானம் வந்து சேரவில்லை.

மேலும், விமான தகவல் தொடர்பும் துண்டிக்கப்பட்டது. இதனால் இரு நகரங்களிலும்பரபரப்பு ஏற்பட்டது.

அந்த விமானத்தில் 96 பயணிகள் மற்றும் 6 ஊழியர்கள் இருந்தனர். சுலவேசிமாகாணத்தில் உள்ள மமுஜு என்ற வனப்பகுதியின் கடும் புயல் மழையில் அந்தவிமானம் பறந்து கொண்டிருந்தபோது அதற்கும், தரைக் கட்டுப்பாட்டு மையத்திற்கும்இடையிலான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது.

இதனால் விமானம் என்ன ஆனது என்ற பதட்டம் அதிகரித்தது. மமுஜு காட்டுப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டை நடந்தது. அப்போது அங்கு விமானம் விழுந்துநொறுங்கிக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

மீட்புக் குழுவினர் விரைந்து சென்று 12 பேரை பலத்த காயங்களுடன் மீட்டனர். மற்ற90 பயணிகளும் பலியாகிவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சில நாட்களுக்கு முன்புதான் இந்தோனேசியாவில் கப்பல் கடலில் மூழ்கி சுமார் 700பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+