இலவச சேலை-நெரிசலில் சிக்கி பெண் பலி
Subscribe to Oneindia Tamil
தூத்துக்குடி:தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அருகே கிறிஸ்தவ சர்ச்சில் வழங்கப்பட்ட இலவசசேலையை வாங்கச் சென்ற பெண் கூட்ட நெரிசலில் சிக்கி பலியானார்.
நாசரேத் அருகே உள்ள ஒய்யான்குடி சிஎஸ்ஐ கிறிஸ்தவ ஆலயத்தில் ஆண்டுதோறும்புத்தாண்டையொட்டி ஏழை, எளியவர்களுக்கு இலவச வேட்டி, சேலைவழங்கப்படும்.
இந்த ஆண்டு 6,000 பேருக்கு இலவச வேட்டி, சேலை வழங்கப்பட்டது. இதைப் பெறபெரும் கூட்டம் கூடியது. கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்ததால் நெரிசல் ஏற்பட்டது.
இதில் சிக்கி முத்துலட்சுமி என்ற 55 வயதுப் பெண் மூச்சுத் திணறல் ஏற்பட்டுஉயி>ழந்தார்.மேலும் லட்சுமி, இசக்கியம்மாள் உள்ளிட்ட 3 பேர் காயமடைந்தனர்.












Click it and Unblock the Notifications