மயிலாடுதுறை-2000 பவுன் நகைகள் கொள்ளை

Subscribe to Oneindia Tamil

மயிலாடுதுறை:மயிலாடுதுறையில் அடகுக் கடைக்காரரின் வீட்டின் கதவை உடைத்து வீட்டில் வைக்கப்பட்டிருந்த 2,000 பவுன்அடகு நகைகளை மர்மக் கும்பல் கொள்ளையடித்துச் சென்றது.

மயிலாடுதுறை மணல்மேடு என்ற இடத்தில் அடகுக் கடை வைத்திருப்பவர் அருகே வைத்தியநாதன். அடகுவைக்கப்படும் நகைகளை தனது வீட்டிற்குக் கொண்டு வந்து வைத்திருப்பது வைத்தியநாதனின் வழக்கம்.

2 நாட்களுக்கு முன்பு வைத்தியநாதன் குடும்பத்தோடு வெளியூர் சென்று விட்டு வீடு திரும்பினார். அப்போது,வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பதைப் பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார்.

பதறி அடித்து அவர் வீட்டுக்குள் சென்று நகைகள் வைக்கப்பட்டிருந்த பெட்டகத்தைப் பார்த்தபோது அதில்இருந்த 2,000 பவுன் நகைகளும் திருடு போயிருந்தது தெரிய வந்தது. நகைகள் தவிர ரூ. 60 ஆயிரம் ரொக்கப்பணத்தையும் கொள்ளையர்கள் திருடிச் சென்று விட்டனர்.

இதுகுறித்து போலீஸில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. சில நாட்களுக்கு முன்புதான் சீர்காழியில் ஒரு வீட்டில்புகுந்த கொள்ளையர்கள் 95 பவுன் நகைகளை திருடிச் சென்றது குறிப்பிடத்தக்கது. இதே கும்பல்தான்வைத்தியநாதன் வீட்டிலும் திருடியிருக்க வேண்டும் என போலீஸார் சந்தேகிக்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+