நெல்லை: கார்-வேன் மோதலில் 3 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

நெல்லை:திருநெல்வேலி அருகே மாருதி காரும் மினி லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 2 பேராசிரியைகள் உள்பட 3 பேர் பலியாயினர்.

நெல்லை-நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் நான்கு வழிச் சாலைக்கானபணிகள் நடந்து கொண்டுள்ளன. இதனால் ரோட்டில் ஜல்லி கொட்டப்பட்டுள்ளது.

இந் நிலையில் மூன்றடைப்பை என்ற இடத்தில் சென்று கொண்டிருந்த மாருதி கார்ஜல்லியில் ஏறியது. மிக வேகத்தில் சென்றதால் கட்டுப்பாட்டை இழந்த அந்த கார்சாலையின் இடது புறத்தை விட்டுவிட்டு, திடீரென ரோட்டின் வலது பக்கத்தைஅடைந்தது.

அப்போது வள்ளியூரில் இருந்து நெல்லை நோக்கி வந்து கொண்டிருந்த ஒரு மினிலாரி மீது அந்த கார் பயங்கரமாக மோதியது. இதில் காரின் முன்பகுதியேஅப்பளமாகிவிட்டது.

இதில் காரை ஓட்டிச் சென்ற வின்சென்ட், அவரது மனைவி ஆகியோர் சம்பவஇடத்திலேயே பலியாயினர்.

பலத்த காயமடைந்த மெர்சி, ஜெயசூர்யா ஆகியோர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர். ஆனால், வழியிலேயே மெர்சி இறந்தார்.

மினி லாரியின் மீது தவறில்லை என்றாலும் அந்த டிரைவர் சம்பவம் நடந்த மறுவினாடியே ஓடிவிட்டார். இப்போதும் தலைமறைவாக இருக்கிறார்.

இது குறித்து மூன்றடைப்பு போலீசார் விசாரித்து வருகின்றனர். பலியான 2பெண்களும் கல்லூரி பேராசிரியைகள் ஆவர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+