இன்று முதல் திருவையாறு தியாகராஜர் ஆராதனை
தஞ்சாவூர்:திருவையாறு சத்குரு ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளின் 160வது ஆராதனை விழா இன்று மாலை தொடங்குகிறது.
ராமநாமதத்திலேயே உயிர் வாழ்ந்து, கர்நாடக சங்கீதத்தில் புகழ் பெற்று விளங்கிய சத்குரு ஸ்ரீதியாகராஜசுவாமிகள் திருவாரூரில் பிறந்து, தஞ்சாவூர் மாவட்டம் திருவையாற்றில் வாழ்நதார். திருவையாறு வடகரையில்முக்தி அடைந்தார்.
அவர் முக்தியடைந்த நாளை ஒவ்வொரு ஆண்டும் ஆராதனை விழாவாக கொண்டாடி வருகின்றனர். இதன்படிஇந்தாண்டு 160வது ஆராதனை விழா, திருவையாறு தியாகாராஜ சுவாமி சமாதி அடைந்த கோயில் வளாகத்தில்இன்று மாலை ஆறு மணிக்கு வெகு விமர்சையாக தொடங்குகிறது.
இவ்விழாவினை ஆந்திர கவர்னர் ராமேஷ்வர் தாக்கூர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைக்கிறார். இதையடுத்துஇசை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. இதில் முதல் நிகழ்ச்சியாக பாம்பே சகோதரிகள் சி.சரோஜா, சி.லலிதாகுழுவினர் இசையஞ்சலி நடைபெறுகிறது.
இவ்விழா ஜனவரி 9ம் தேதி காலை 8.30 மணிக்கு ஆஞ்சநேய உற்சவத்துடன் நிறைவு பெறும்.
அதே போல உலகம் முழுவதும் பல நாடுகளிலும் தியாகராஜ ஆராதனை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications