சென்னை மாநகருக்கு 480 புதிய பஸ்கள்
சென்னை:மார்ச் மாதத்துக்குள் 3,000 புதிய வழித்தடங்களில் பஸ்கள் விடப்படும் என அமைச்சர்கே.என்.நேரு கூறியுள்ளார்.
சென்னை நங்கநல்லூரில் இருந்து கோயம்பேட்டுக்கு புதிய வழித் தடத்தில்பஸ்போக்குவரத்து தொடக்க விழா இன்று நடந்தது. இதில் நேரு பேசுகையில்,
14 ஆண்டுகள் ஓடிய அனைத்து பஸ்களையும் புதுப்பிக்க முதல்வர் கருணாநிதிஉத்தரவிட்டுள்ளார். போக்குவரத்து கழகத்துக்கு அரசு ரூ. 550 கோடி ஒதுக்கியுள்ளது.இதில் ரூ. 250 கோடி மாணவ, மாணவிகளின் பஸ் பாசுக்கு மானியமாகவழங்கப்படுகிறது.
ரூ. 300 கோடியில் 480 புதிய பஸ்கள் வாங்கப்பட இருக்கிறது. இவற்றில் 30 பஸ்கள்ஓரிரு நாளில் வந்து விடும். மற்ற பஸ்கள் மார்ச் மாதத்துக்குள் வாங்கப்படும். மாநகரபோக்குவரத்து கழக பஸ்கள் இதுவரை 40 கிலோ மீட்டர் தூரம் வரை சென்று வந்தன.இனி 50 கிலோ மீட்டர் தூரம் வரை செல்ல உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் உள்ள 7 போக்குவரத்து கழகங்கள் மூலம் ரூ.150 கோடிவருவாய் அதிகரித்துள்ளது. மார்ச் மாதத்துக்குள் 3,000 புதிய வழித்தடங்களில் பஸ்விடப்படும். மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 2,000 வழித் தடத்திலும் கிராமப்பகுதிகளில் 1,000 வழித் தடத்திலும் பஸ்கள் இயக்கப்படும் என்றார்.
புதிதாக தொடங்கப்பட்டுள்ள இந்த பஸ் வழித்தடமான எம்-70என் நங்கநல்லூரில்இருந்து கோயம்பேடு வணிக வளாகம் வரை செல்லும்.
இதே போல் தி.நகரில் இருந்து படப்பை வரை செல்லும் எம்-79 வழித்தட பஸ்சையும்நேரு படப்பையில் தொடங்கி வைத்தார்.












Click it and Unblock the Notifications