தஞ்சை முதியவருக்கு துபாயில் நேர்ந்த பரிதாபம்
துபாய்:தஞ்சையிலிருந்து 14 ஆண்டுகளுக்கு முன் துபாய்க்கு சமையல் வேலை பார்க்கப் போன முதியவர், தனதுபாஸ்போர்ட்டைத் தொலைத்து விட்டு நீண்ட காலத்திற்குப் பின்னர் பாஸ்போர்ட் கிடைத்து ஊருக்குத்திரும்பவிருந்த நிலையில் மாரடைப்பில் பரிதாபமாக மரணமடைந்தார்.
தஞ்சையைச் சேர்ந்தவர் முகம்மது கமால் (வயது 70). 14 ஆண்டுகளுக்கு முன் இவர் துபாயில் சமையல் வேலைபார்க்க சென்றார். போன இடத்தில் பாஸ்போர்ட்டையும், விசாவையும் தொலைத்து விட்டார்.
இதையடுத்து அவரது வேலை பறிக்கப்பட்டது. வேலையையும் இழந்து, பாஸ்போர்ட்டையும் இழந்து நாடுதிரும்ப முடியாமல் தவித்த கமால் அங்குள்ள பூங்காவில் அடைக்கலம் புகுந்து பரிதவித்து வந்தார்.
கடந்த 14 ஆண்டுகளாக டூப்ளிகேட் பாஸ்போர்ட் பெற தவியாய் தவித்து வந்தார். ஒரு வழியாக அவருக்குபாஸ்போர்ட் கிடைத்தது. இதையடுத்து தாயகம் திரும்ப தயாரானார். தனது குடும்பத்தினருக்குப் புதுத் துணிகள்உள்ளிட்ட பொருட்களையும் வாங்கி வைத்தார்.
பின்னர் தான் வழக்கமாக படுக்கும் பூங்காவுக்கு வந்து படுத்தவர், அப்படியே மாரடைப்பில் இறந்து போனார்.இந்த சம்பவம் அவரை அறிந்த துபாய் வாழ் இந்தியர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications