காதலித்த குற்றம் - காது, மூக்கு கட்!
முல்தான்:பாகிஸ்தானில், பழங்குடியினப் பெண்ணை காதலித்துத் திருமணம் செய்த நபரின் காது மற்றும் மூக்குதுண்டிக்கப்பட்டது. தாயாரின் கை வெட்டப்பட்டது. சகோதரருக்கும் காதுகள் துண்டிக்கப்பட்டன.
![]() |
பாகிஸ்தானின் பழங்குடியின கிராமங்களில் இதுபோன்ற தண்டனைகள் வழங்கப்படும் சம்பவங்கள் சகஜமானது.தினசரி ஒரு கொலை நடக்கும் கிராமங்கள் கூட உள்ளன.
பெண் குடும்பத்தாரின் சம்மதம் இல்லாமல் யாராவது காதலித்துத் திருமணம் செய்தால் அவ்வளவுதான்,மாப்பிள்ளை வீட்டாரின் கதி அதோ கதிதான்.
முல்தான் நகரைச் சேர்ந்த முகம்மது இக்பால் என்பவர் ஷானாஸ் என்ற பழங்குடியினப் பெண்ணைக் காதலித்தார்.இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். காதலை வீட்டில் சொன்னால் சம்மதம் கிடைக்காது,தண்டனைதான் கிடைக்கும் என்பதால் ஷானாஸ் யாருக்கும் தெரியாமல் இக்பாலுடன் அவரது வீட்டிற்குச் சென்றுகல்யாணம் செய்து கொண்டார்.
பின்னர் ஷானாஸின் குடும்பத்திற்குப் பயந்து இக்பால், ஷானாஸ் மற்றும் இக்பாலின் குடும்பத்தினர் வேறுஊருக்கு இடம் பெயர்ந்து விட்டனர். இந்த நிலையில் பக்ரீத் பண்டிகையைக் கொண்டாடுவதற்காக முல்தானுக்குவந்திருந்தனர்.
இவர்கள் வந்ததை அறிந்த ஷானாஸ் சார்ந்த பழங்குடியினத்தைச் சேர்ந்த 15 பேர் பயங்கர ஆயுதங்களுடன்இக்பாலின் வீட்டுக்கு வந்தனர். அப்போது ஷானாஸ் வீட்டில் இல்லை. ஷானாஸை எங்களுடன் திருப்பி அனுப்பிவிடுங்கள் என இக்பாலிடம் அவர்கள் கூறியுள்ளனர். அதற்கு இக்பால் முடியாது என்று கூறியுள்ளார்.
இதையடுத்து ஆத்திரமடைந்த அவர்கள் இக்பாலின் காதுகள், மூக்கு ஆகியவற்றை கத்தியால் அறுத்தனர். பின்னர்இக்பாலின் அண்ணனின் காதுகளும் அறுக்கப்பட்டன. அவர்களது தாயாரின் கைகளையும் வெட்டினர். பின்னர்அக்கும்பல் சென்று விட்டது.
உடல் உறுப்புகள் துண்டிக்கப்பட்ட 3 பேரும் மருத்துவமனைக்கு விரைந்து சென்றனர். இதுகுறித்து இக்பாலின்அண்ணன் முகம்மது யாசின் கூறுகையில், எங்களை தரையில் இழுத்துப் போட்டு சரமாரியாக அடித்தனர். அதன்பின்னர் காது, மூக்கை அறுத்தனர் என்றார்.
இந்த சம்பவம் தொடர்பாக ஐந்து பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். பாகிஸ்தானில் இதுபோன்றகாரணத்திற்காக ஆண்டுதோறும் 1000 பேர் வரை கொல்லப்படுவதாக மனித உரிமை அமைப்புகள்தெரிவிக்கின்றன.













Click it and Unblock the Notifications