சென்னை போலீஸ் 150: இன்று கோலாகல விழா
சென்னை:சென்னை மாநகர காவல்துறையின் 150வது ஆண்டு விழா இன்று கோலாகலமாக தொடங்குகிறது. முதல்வர்கருணாநிதி விழாவைத் தொடங்கி வைக்கிறார்.
சென்னை காவல்துறை உருவாக்கப்பட்டு 150 ஆண்டுகள் ஆகின்றன. இதையடுத்து 150வது ஆண்டு விழாவுக்குஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்றும், நாளையும் இந்த விழா நடைபெறும்.
150வது ஆண்டு விழாவையொட்டி சென்னை மாநகரில் உள்ள 121 காவல் நிலையங்களும் விழாக்கோலம்பூண்டுள்ளன. அனைத்து காவல் நிலையங்களும் வெள்ளை அடிக்கப்பட்டு, விளக்குகள் தொங்க விடப்பட்டுதிருவிழாக் கோலமாக உள்ளது.
காவல் நிலையத்திற்கு வருகிற அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்படுகின்றன. மாநகர காவல்துறை ஆணையர்அலுவலகமும் விளக்கு அலங்காரத்தில் ஜொலித்து வருகிறது.
இன்று மாலை 4 மணிக்கு சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் 150வது ஆண்டு விழாவை முதல்வர்கருணாநிதி தொடங்கி வைக்கிறார்.
நிகழ்ச்சியின்போது காவல்துறை சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள குறும்படத்தை முதல்வர் கருணாநிதிவெளியிடுகிறார். விழா மலரையும் அவர் வெளியிடுகிறார்.
சென்னை மாநகர காவல்துறைக்கு புதிய அலுவலகத்திற்கான அடிக்கல்லையும் விழாவின்போது கருணாநிதிநாட்டுகிறார்.
150வது ஆண்டு விழாவையொட்டி கண்காட்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் ஆரம்ப காலம் முதல்சென்னை காவல்துறையில் ஏற்பட்ட மாற்றங்கள் சித்தரிக்கப்பட்டுள்ளன.
அந்தக் கால போலீஸ் சீருடைகள், தொப்பிகள், துப்பாக்கிள், அந்தக் கால காவல் நிலையங்கள், இப்போதுஏற்பட்டுள்ள மாற்றங்கள் செட் போட்டு வைத்துள்ளனர். மேலும் கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.
நாளை நடைபெறும் நிறைவு நாள் நிகழ்ச்சியல் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கலந்து கொள்கிறார். இந்தநிகழ்ச்சி ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள இமேஜ் கலையரங்கத்தில் நடைபெறுகிறது.












Click it and Unblock the Notifications