காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்ற மனைவி
ஈரோடு:கள்ளக் காதலனுடன் சேர்ந்த கணவனை கொலை செய்து பெண் உள்பட 3 பேரை போலீசார் கைதுசெய்துள்ளனார்.
ஈரோடு அருகே உள்ள கே.என்.பாளையத்தை சேர்ந்த ராமசாமி (35). இவரது மனைவி சின்னக்கன்னி (40).கடந்த சில தினங்களுக்கு முன்பு கே.என்.பாளையம் அருகே உள்ள ஆதிபெருமாள் காடு என்ற இடத்தில்ராமசாமி எரிக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார்.
இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் செந்தில் குமார் (36)என்பவர் பெரும்முகை கிராம நிர்வாக அலுவரிடம் ராமசாமியை கொன்றது நான் தான் என்று சரண் அடைந்தார்.இதையடுத்து அவர் போலீசிஸ் ஒப்படைக்கப்பட்டார்.
இதையடுத்து செந்தில் குமாரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் செந்தில் குமார் கூறியதாவது,
நானும் ராமசாமியும் நண்பர்கள். இதனால் நான் அடிக்கடி ராமசாமி வீட்டுக்கு சென்று வருவேன். இதில் எனக்கும்ராமசாமி மனைவிக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இது ராமசாமிக்கு தெரியவந்தது. இதனால்ராமசாமி தனது மனைவி சின்னக்கன்னியை கண்டித்தார்.
இதனால் நானும், சின்னக்கன்னி மற்றும் எனது மற்றொரு நண்பர் கருப்புசாமியும் சேர்ந்து ராமசாமியைதீர்த்துக்கட்ட முடிவு செய்தோம். சம்பவத்தன்று இரவு ராமசாமியும், சின்னக்கன்னியும் அவர்களது வீட்டில் பேசிகொண்டு இருந்தனர். அப்போது அங்கு நானும், கருப்புசாமியும் அறிவாளுடன் சென்று ராமசாமியைவெட்டினோம். இதில் அவர் துடிதுடித்து உயிரிழந்தார்.
பின்னர் ராமசாமியின் உடலை ஒரு சாக்குமூட்டையில் கட்டி, எனது மொப்ட்டில் நானும், சின்னக்கன்னியும்ராமசாமியின் உடலை ஆதிபெருமாள் காட்டுக்கு கொண்டு சென்றோம்.
அங்கு அவரது உடலில் மண்ணெண்ணையை ஊற்றி எறித்தோம் என கூறினார்.
இது தொடர்பாக ராமசாமியின் மனைவி சின்னக்கன்னியையும், கருப்புசாமியையும் போலீசார் கைது செய்தனர்.இது குறித்து அவர்களிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications