செயின் பறிக்க முயன்று தர்ம அடி வாங்கிய நபர்
Subscribe to Oneindia Tamil
ஈரோடு:பள்ளி மாணவியின் கழுத்தில் தங்க செயினை பறிக்க முயன்ற வாலிபரை பொதுமக்கள் பிடித்து கட்டி வைத்துதர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைத்தனர்.
![]() |
ஈரோடு ரயில்வே காலனி விநாயகர் கோயில் தெருவை சேர்ந்த மாணவி ஒருவர் டியூஷன் முடித்து விட்டு வீடுதிரும்பிக் கொண்டிருந்தார். அப்போது பின் பக்கமாக சைக்கிளில் வந்த வாலிபர், மாணவியின் கழுத்தில் இருந்ததங்க சங்கிலியை பறிக்க முயன்றார்.
![]() |
அப்போது மாணவி சத்தம் போட்டார். இதனால் பயந்து போன வாலிபர் அங்கிருந்த தப்பிக்க முயன்றார். ஆனால்பொதுமக்கள் அவரை விரட்டிப் பிடித்தனர். பின்னர் அவனை மின் கம்பத்தில் கட்டி வைத்து தர்ம அடிகொடுத்தனர்.
அடி தாங்க முடியாமல் அவன் மயங்கி விழுந்த பின் அவனை போலீஸாரிடம் ஒப்படைத்தனர். போலீஸார்விசாரித்தபோது அவன் பெயர் பாபு என்றும், ஈரோடு மரப்பாலம் பகுதியை சேர்ந்தவன் என்றும் தெரியவந்தது.














Click it and Unblock the Notifications