முன்னாள் திமுக அமைச்சருக்கு அதிமுகவில் பதவி
சென்னை:கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் அமைச்சராக இருந்து பின்னர் அதிமுகவில் இணைந்த ஜெனீபர் சந்திரனுக்குஅதிமுக மீனவர் அணி இணைச் செயலாளர் பதவியை வழங்கியுள்ளார் ஜெயலலிதா.
கடந்த திமுக அமைச்சரவையில் மீனவளத்துறை அமைச்சராக இருந்தவர் ஜெனீபர் சந்திரன். ஆனால், தூத்துக்குடிமாவட்ட திமுகவில் மாவட்ட திமுக செயலாளர் பெரியசாமியின் மகள் கீதா ஜீவனின் செல்வாக்கு அதிகரித்தது.இதனால் ஜெனீபர் ஓரங்கட்டப்பட்டார்.
இதைத் தொடர்ந்து ஜெனீபர் சந்திரன் திமுகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். ஆனால் அவருக்குஅதிமுகவில் பொறுப்பு ஏதும் வழங்கப்படாமல் இருந்தது.
இந்த நிலையில் அதிமுக மீனவர் அணி இணைச் செயலாளர் பதவியை ஜெயலலிதா ஜெனீபருக்குவழங்கியுள்ளார். இதுதொடர்பாக ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுக மீனவர் பிரிவு இணைச்செயலாளர் பொறுப்பில் முன்னாள் அமைச்சர் ஜெனீபர் சந்திரன் இன்று முதல் நியமிக்கப்படுகிறார் என்றுதெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல வேலூர் மேற்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் மரிய பெலிக் கட்சியிலிருந்துநீக்கப்பட்டுள்ளார். கட்சி கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப் பெயர் ஏற்படும் வகையிலும் நடந்துகொண்டதால் மரிய பெலிக்ஸ் நீக்கப்பட்டுள்ளதாக ஜெயலிலதா தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications