27% இடஒதுக்கீடு சட்டத்துக்கு கலாம் ஒப்புதல்!
டெல்லி:மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் பிற்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் ஒப்புதல்வழங்கியுள்ளார்.
மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27சதவீத இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்ட மசோதா பலத்த எதிர்ப்புக்குமத்தியில் சமீபத்தில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டதைத்தொடர்ந்து குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்தமசோதாவில் நேற்று அப்துல் கலாம் கையெழுத்திட்டார். இதையடுத்து இந்த மசோதாசட்டமாகியுள்ளது.
இந்த கல்வியாண்டு முதலே இந்த இட ஒதுக்கீடு அமலுக்கு வருகிறது. இடஒதுக்கீட்டில் கிரீமி லேயர் பிரிவினரும் சேர்க்கப்பட்டுள்ளனர் என்பதுகுறிப்பிடத்தக்கது.
ஆண்டுக்கு 9 சதவீதம் என்ற விகிதத்தில் அடுத்த மூன்று ஆண்டுகளில் 27 சதவீத இடஒதுக்கீடு அமல்படுத்தப்படும்.
இதேபோன்ற இட ஒதுக்கீட்டை அரசு உதவி பெறாத தனியார் சுய நிதி கல்லூரிகளிலும்அமல்படுத்த அரசு சட்ட மசோதாவைத் தயார் செய்துள்ளது. விரைவில் இதுவும்நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் என்று ஏற்கனவே மத்திய மனித வளத்துறைஅமைச்சர் அர்ஜூன் சிங் கூறியுள்ளார்.
இந்த இட ஒதுக்கீட்டை எதிர்த்து டெல்லியிலும் வேறு சில இடங்களிலும் பாஜகமாணவர் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தினர். இந்தபோராட்டக்காரக்களுக்கு பாஜகவும் ஆதரவு தந்தது. ஆனால், சட்ட மசோதா கொண்டுவரப்பட்டபோது பிற்பட்டவர்களின் வாக்குகளை மனதில் வைத்து அமைதியாகவாக்களித்துவிட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications