பெரியாறு சுவர் சேதம்: கேரளாவின் சதி-பாஜக
சென்னை:முல்லைப் பெரியாறு அணையை உடனடியாக மத்திய அரசு தனது கட்டுப்பாட்டுக்குள்கொண்டு வர வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் இல.கணேசன் கோரிக்கைவிடுத்துள்ளார்.
இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், தேசியஒற்றுக்ைகு மட்டுமல்லாமல், திராவிடக் கொள்கைகளுக்கும் ஒரு பெரும் மிரட்டலாகஇந்தப் பிரச்சினை அமைந்துள்ளது.
அணையின் கைப்பிடிச் சுவர் சேதப்படுத்தப்பட்டுள்ளதில் கேரள அரசின் திட்டமிட்டசதி இருப்பது போலத் தோன்றுகிறது. அணைக்குப் பாதுகாப்பு தர மத்திய படைகளைஅனுப்ப வேண்டும் என்று தமிழக அரசு பிரதமரிடம் கோரியிருப்பதை நான்வரவேற்கிறேன்.
142 அடியாக தண்ணீர் இருப்பு அளவை உயர்த்த வேண்டும் என்ற உத்தரவைஅமல்படுத்த உதவக் கோரி உச்சநீதிமன்றத்தை விரைவில் தமிழக அரசு நாடவேண்டும்.
மதிமுகவில் ஏற்பட்டிருக்கும் பிளவு எனக்கு கவலை தருகிறது. எந்த அரசியல்கட்சியும் பிளவுபடுவது சந்தோஷமான விஷயம் அல்ல. ஆனால் மதிமுக விவகாரம்அக்கட்சியின் உள்விவகாரம் என்பதால் இதற்கு மேல் அதற்குள் போகவிரும்பவில்லை.
சமீபத்தில் டெல்லியில் பிடிபட்ட லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகளிடம் நடத்தியவிசாரணையில், டெல்லியில் குண்டு வைத்து விட்டு சென்னை வழியாகபாகிஸ்தானுக்குத் தப்பிச் செல்ல அவர்கள் திட்டமிட்டிருந்தது தெரிய வந்துள்ளது.
இதைப் பார்க்கும்போது சென்னை தீவிரவாதிகளின் சொர்க்க பூமியாகி விட்டதோஎன்று எண்ணத் தோன்றுகிறது. சமீபத்தில் சென்னை அருகே ராக்கெட் லாஞ்சர்தயாரிப்பு தொழிற்சாலையை தமிழக போலீஸார் கண்டுபிடித்தனர்.
ஆந்திர நக்சலைட்டுகளுக்கு இங்கிருந்து ராக்கெட் லாஞ்சர்கள் அனுப்பப்பட்டுள்ளன.இவற்றில் உள்ளூர் தீவிரவாத அமைப்புகளுக்குத் தொடர்பு இருக்கிறதா என்பதுகுறித்தும் போலீஸார் தீவிரமாக விசாரிக்க வேண்டும்.
தென்காசியில், இந்து முன்னணித் தலைவர் குமார் பாண்டியனைக் கொன்றஉண்மையான குற்றவாளியை போலீஸார் இன்னும் விட்டு வைத்துள்ளனர். அவரைஉடனடியாக கைது செய்ய வேண்டும் என்றார் கணேசன்.












Click it and Unblock the Notifications