தீக்குளிப்பது போல நடித்த சிறுவன் பரிதாப சாவு
சென்னை:டிவியில் வரும் நிகழ்ச்சியைப் பார்த்து விட்டு அதேபோல தனது வீட்டில் தீக்குளித்துப்பார்க்க முயன்ற சிறுவன் பரிதாபமாக இறந்து போனான்.
சென்னை வியாசர்பாடி தேசிகானந்தபுரம் பகுதியச்ை சேர்ந்தவன் பிரேமானந்த். 8வயதாகும் இவன் சிறு வயதிலேயே தந்தை, தாயை இழந்தவன். தனது பாட்டி கோதைநாயகியுடன் வசித்து வந்தான்.
அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் 5ம் வகுப்பு படித்து வந்தான்.புதன்கிழமை மதியம் பள்ளியிலிருந்து வீடு திரும்பிய பிரேமானந்த் தனது வீட்டில்பெரியம்மா மகன் ஈஸ்வருடன் (அவனுக்கு வயது 4) சேர்ந்து விளையாடிக்கொண்டிருந்தான்.
பிறகு இருவரும் டிவியில் கார்ட்டூன் படம் பார்த்துள்ளனர். அப்போது பவர் ரேஞ்சர்ஸ்என்ற நிகழ்ச்சியில் வரும் ஒரு காட்சி பிரேமானந்த்தைக் கவர்ந்துள்ளது. அதை தானும்செய்து பார்க்க விரும்பிய அவன், ஈஸ்வரை அவனது வீட்டுக்கு அனுப்பி வைத்துவிட்டான்.
பின்னர் வீட்டின் சமைலயறைக்குள் சென்ற பிரேமானந்த் அங்கிருந்த மண்ணெண்ணைடின்னை எடுத்து அதிலிருந்த மண்ணெண்ணையை தனது உடலில் ஊற்றிக் கொண்டு தீவைத்துள்ளான்.
டிவியில் வருவது போல தானும் நெருப்பிலிருந்து தப்பி வருவோம் என நினைத்துஇவ்வாறு செய்தான். ஆனால் உடல் முழுவதும் பரவிய நெருப்பு அந்த சிறுவனைபொசுக்கி விட்டது.
பிரேமானந்த்தின் குரல் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து அவனை மீட்டுமருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு பவர் ரேஞ்சர்ஸ் பார்த்துவிட்டுத்தான் இதுபோல செய்ததாக பிரேமானந்த் வாக்குமூலம் கொடுத்தான். பின்னர்சிகிச்சை பலனின்றி பிரேமானந்த் பரிதாபமாக இறந்தான்.
தொலைக்காட்சிகளில் வரும் நிகழ்ச்சிகளில் எவற்றை குழந்தைகள் பார்க்கலாம்,பார்க்கக் கூடாது என்பதில் பெற்றோரும், குடும்பத்தினரும் மிகக் கவனமாக இருக்கவேண்டும். அப்போதுதான் இதுபோன்ற துயரங்களை தவிர்க்க முடியும்.












Click it and Unblock the Notifications