ஜட்டி, பனியனுடன் கைதி எஸ்-பெண்கள் பீதி

Subscribe to Oneindia Tamil

சென்னை:சென்னை அருகே பூந்தமல்லி காவல் நிலையத்திலிருந்து கை விலங்கு மாட்டப்பட்ட கைதி, ஜட்டி, பனியனுடன் அதிகாலையில்தப்பி ஓடியதால் தெருவில் போட்டுக் கொண்டிருந்த பெண்கள் பீதியடைந்து வீட்டுக்குள் ஓடினர்.

பூந்தமல்லி அருகே குன்றத்தூர் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் மோட்டார் சைக்கிள்கள் அதிக அளவில் திருடு போய் வந்தன.இதுதொடர்பாக குன்றத்தூர் போலீஸ் நிலையத்திற்கு அதிக அளவில் புகார்கள் வந்தன.

இதையடுத்து தீவிர வேட்டையில் இறங்கிய போலீஸார் குன்றத்தூர் பஸ் நிலையம் அருகே வைத்து ஒரு நபரை மடக்கினர்.

அவரது பெயர் வெங்கடேசன் என்றும் திருவண்ணாமலையைச் சேர்ந்த அவர் 27க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்களைத்திருடியவர் என்றும் விசாரணையில் தெரிய வந்தது.

இதையடுத்து அந்த நபரை குன்றத்தூர் காவல் நிலையத்திற்கு போலீஸார் கொண்டு சென்றனர். கைவிலங்கிடப்பட்ட நிலையில்அவரை காவல் நிலையத்தில் வைத்திருந்தனர். அவரது ஆடைகளைக் கழற்றி வெறும் ஜட்டி-பனியனுடன் வைத்திருந்தனர்.

அதிகாலையில் வெங்கடேசன் காவல் நிலையத்திலிருந்து தப்பினார். கைவிலங்கு மாட்டிய நிலையில் ஜட்டி, பனியனுடன் அவர்தெருவில் இறங்கி ஓடினார். மார்கழி மாதம் என்பதால் அந்த அதிகாலை நேரத்தில் அத்தெருவில் குடியிருக்கும் பெண்கள்கோலம் போட்டுக் கொண்டிருந்தனர்.

ஜட்டி, பனியனுடன் ஒரு நபர் ஓடி வந்ததைப் பார்த்து அவர்கள் தெறித்துப் பாய் வீட்டுக்குள் ஓடினர். இந்த சம்பவம்அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

பனியன்-ஜட்டி வெங்கடேசனை போலீஸார் வலை வீசித் தேடி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+