தி.க. நிறுவும் 128 பெரியார் சிலைகள்
சென்னை:தந்தை பெரியாரின் 128வது பிறந்த தினத்தையொட்டி தமிழகம் முழுவதும் வெண்கலத்தால் ஆன 128சிலைகளை நிறுவுவது என திராவிடர் கழக தலைமை செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தி.க. தலைமை செயற்குழுக் கூட்டம் தலைவர் கி.வீரமணி தலைமையில் நடந்தது. இதில் பல முக்கிய தீர்மானங்கள்நிறைவேற்றப்பட்டன.
பெரியாரின் 128வது பிறந்த நாளையொட்டி நாடெங்கும் 128 வெண்கலச் சிலைகளை ஒரே மாதிரியானதோற்றத்தில் நிறுவுவது.
அனைத்துத் தமிழர்களும் உவகை பொங்கப் பொங்கல் திருநாளை புதுப் பொலிவோடு கொண்டாட வேண்டும்.தமிழ்நாடே விழாக் கோலத்தில் திளைக்க வேண்டும். அதே நேரத்தில் ஈழத்தில் வாழ்வுரிமைக்காகப் போராடும்தமிழர்கள் நலன் காக்க, தக்க வகையில் கைகோர்த்துக் குரல் கொடுப்போம்.
முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு பொறுப்பை மத்திய அரசின் தொழில் பாதுகாப்புப் படை வசம்ஒப்படைக்க வேண்டும். தமிழக அரசு உடனடியாக உச்சநீதிமன்றத்தை அணுக வேண்டும்.
திரைப்படம், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் வன்முறை மற்றும் ஆபாசக் காட்சிகள், மாணவர்கள் முதல்பெரியவர்கள் வரை பெரும் பாதிப்புக்கு ஆளாக்குவதால், சமூக நலன் கருதி மத்திய அரசே இதில் ஒரு ஒழுங்குக்கட்டுப்பாட்டை கொண்டு வர வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.












Click it and Unblock the Notifications