கிணற்றில் பிணமாககிக் கிடந்த நேபாள இளைஞர்
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னையில் காவலாளியாக வேலை பார்த்து வந்த நேபாளத்தை சேர்ந்த நபர் கிணற்றில் பிணமாக மிதந்தார்.இவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
![]() |
சென்னை ஆதம்பாக்கம் மகாலெஷ்மி நகர் 15வது தெருவில் உள்ள காலி மனையில் வாட்சமேனாக வேலைபார்த்தவர் துளசிராம் (33). இவர் நேபாளத்தை சேர்ந்தவர். இவர் காலிமனையில் குடிசை அமைத்துதங்கியிருக்கிறார்.
இந்நிலையில் அவர் தங்கியிருக்கும் குடிசை அருகில் இருந்த கிணற்றில் அவர் பிணமாக கிடந்தார். இதுகுறித்துதகவல் அறிந்த போலீஸார் அங்கு விரைந்து வந்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காகராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
துளசிராமின் கழுத்து பகுதியிலும் அவரது நெற்றியிலும் வெட்டுக் காயங்கள் உள்ளது. எனவே அவர் கொலைசெய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.













Click it and Unblock the Notifications