தமிழக நிலங்களை சுருட்டும் மலையாளிகள்!
கன்னியாகுமரி:அரேபியாவில் ஈட்டும் பணத்தை வைத்துக் கொண்டு தமிழகத்தில் நிலங்களை மலையாளிகள் சுரண்டி வருவதாகபாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
கன்னியாகுமரியில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
முப்போகும் விளையும் நஞ்சை, புஞ்சை நிலத்தையும் அபகரித்து ரியல் எஸ்டேட்டாக மாற்றும் ஒரு பெரியவியாதி தமிழகத்தில் பரவி வருகிறது. சென்னையை சுற்றியுள்ள திருவள்ளூர், காஞ்சி மாவட்டங்களில் இந்தவியாதி முற்றிவிட்டது.
அதே வியாதி குமரி மாவட்டத்தில் கன்னியாகுமரி, நாகர்கோவில் பகுதிகளிலும் வேகமாக பரவி வருவதாககேள்விப்பட்டேன். முப்போகம் விளையும் நஞ்சை நிலங்கள் எப்போதும் பச்சை பசேலென்று காட்சி அளிக்கும்இந்த மாவட்டத்தில் உள்ள நிலங்களில் கல்லை அள்ளிப் போட்டு ரியல் எஸ்டேட்டாக மாற்றி வருகிறார்கள்.
அரேபிய நாட்டுப் பணம் கேரளாவுக்கு அதிகம் வருகிறது. அவர்கள் தான் இங்கு வந்து விளை நிலங்களை நமதுவிவசாயிகளிடம் இருந்து சுரண்டி நம் மக்களிடமே ரியல் எஸ்டேட்டாக மாற்றி விற்று வருகின்றனர்.
பொன் முட்டையிடும் வாத்தை கொல்வது மாதிரி தான் இது. எனவே தமிழகத்தில் விளை நிலங்களை ரியல்எஸ்டேட்டாக்குவதை கட்டுப்படுத்த கடுமையான சட்டம் கொண்டு வர வேண்டும்.
முல்லைப் பெரியாறு அனை விவகாரத்தில் ஒரு உத்தரவைப் போட்டு அணையை கையில் எடுத்து நீர் தேக்கஅளவை 142 அடியாக உயர்த்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களோடு பேசிக்கொண்டிருக்கக் கூடாது.
7 மாத காலத்தில் திமுக ஆட்சியில் மிகப் பெரும் சாதனைகள் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன. முதலமைச்சர் ஒருசாதனை சிகரமாக விளங்குகிறார். அவருடைய சாதனைகள் தொடர வேண்டும்.
விரைவில் அதிமுக ஆட்சிக்கு வரும் என ஜெயலலிதா சொல்வது அவரது சொந்தக் கருத்து. இதில் கருத்து கூறநான் விரும்பவில்லை.
தமிழகத்தில் 5 ஆண்டுகளுக்கு ஆட்சியில் பங்கு கேட்க மாட்டோம். அதே சமயம் கல்வி,வேளாண்மைத்துறைகளை கண்காணிக்க ஒரு நிழல் அமைச்சரவையை அமைக்க விரும்புகிறோம் என்றார்ராமதாஸ்.












Click it and Unblock the Notifications