கொடை: காதலியுடன் வாலிபர் தற்கொலை
கொடைக்கானல்:மதுரையை சேர்ந்த வாலிபர் ஒருவர் தனது காதலியுடன் கொடைக்கானல் லாட்ஜில் விஷம் குடித்து தற்கொலைசெய்து கொண்டார்.
மதுரையை சேர்ந்த ஒரு காதல் ஜோடிகள் நேற்று மாலை கொடைக்கானல் வந்து, அண்ணாசாலையில் உள்ள ஒருலாட்ஜில் அறை எடுத்து தாங்கினார்.
இந்நிலையில் காதல் ஜோடி இருவரும் இன்று காலை வெகு நேரம் ஆகியும் வெளியே வரவில்லை. இதனால்சந்தேகம் அடைந்த லாட்ஜ் நிர்வாகிகள் அறைக்கதவை உடைத்து உள்ளே சென்றனர்.
அங்கு காதல் ஜோடி விஷம் குடித்த நிலையில் மயங்கி கிடந்தனர். இதையடுத்து லாட்ஜ் நிர்வாகிகள் அங்குவிரைந்து வந்து இருவரையும் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால் அவர்கள் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தனர். இதையடுத்து போலீசார் அவர்கள் தங்கி இருந்துஅறையில் சோதனை நடத்தினர். அதில் அவர்கள் கல்லூரி மாணவர்கள் என்று தெரியவந்தது.
உயிரிழந்த மாணவர் பெயர் ராகவ கிருஷ்ணன். இவர் மதுரை கே.புதூர் பகுதியை சேர்ந்தவர். இவர் தனதுபக்கத்து வீட்டு பெண்ணுடன் ஏற்பட்ட காதலுக்கு எதிர்ப்பு கிளம்பியதால், கொடைக்கானல் வந்து தற்கொலைசெய்து கொண்டது தெரியவந்தது.












Click it and Unblock the Notifications