மப்பில் தூங்கிய கேட் கீப்பர்-காத்திருந்த ரயில்

Subscribe to Oneindia Tamil

தர்மபுரி:குடி போதையில் இரவு பணி பார்த்த ரயில்வே கேட் கீப்பர் தூங்கியதால், நடுவழியில் சிக்னல் இல்லாமல் ரயில்நிறுத்தப்பட்டது.

தர்மபுரி அருகேயுள்ள அதியமான் கோட்டையில் ரயில்வே கிராசிங் உள்ளது. இங்கு இரவு 11.30 மணிக்குசேலத்தில் இருந்து பெங்களூர் நோக்கி ஒரு சரக்கு ரயில் வந்தது. அதியமான் கோட்டை ரயில்வே கேட் அருகேரயில் வந்த போது சிக்னல் கிடைக்கவில்லை.

இதனால் ரயில் நிறுத்தப்பட்டது. ரயிலிலிருந்து ஹார்ன் அடித்தும் எந்த தகவலும் இல்லை. கால் மணி நேரத்துக்கும்மேலாகியும் சிக்னல் விழாததால் அருகேயுள்ள சிவாடி ரயில் நிலைய ஸ்டேஷன் மாஸ்டருக்கு தகவல்தெரிவிக்கப்பட்டது.

பின்னர் நெடுஞ்சாலைத்துறை ரோந்து போலீசார் சம்பந்தப்பட்ட ரயில்வே கேட்டுக்கு சென்று பார்த்தனர். அங்குகேட் கீப்பர் தூங்கிக் கொண்டிருந்தார். அவர் கடும் போதையில் இருந்ததார்.

இதையடுத்து போலீஸார் கேட்டை மூடி சரக்கு ரயிலை அனுப்பி வைத்தனர். கேட் கீப்பரின் அலட்சியத்தால் அரைமணி நேரம் ரயில் நிறுத்தப்பட்டு தாமதமாக கிளம்பிச் சென்றது. இதையடுத்து அங்கு உடனடியாக வேறு கேட்கீப்பர் பணிக்க நியமிக்கப்பட்டார். அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ரயில்வே அதிகாரிகள்தெரிவித்துள்ளனர்.

கடந்த 2 மாதத்திற்கு முன்பு இதே ரயில்வே கிராசிங்கில் வேலை பார்த்த கேட் கீப்பரும் பணி நேரத்தில்தூங்கியதால் பணி நீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+