மதிமுக ஒரு செத்த பாம்பு: ஆற்காடு காட்டம்!
சென்னை:மதிமுக ஒரு செத்த பாம்பு. அதை அடிக்க தடி தேவையில்லை என்று திமுகபொருளாளரும், மின்துறை அமைச்சருமான ஆற்காடு வீராசாமி காட்டமாககூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்,
மதிமுக பொதுக்குழுக் கூட்டத்தை சீர்குலைக்க முதல்வர் கருணாநிதி முயல்வதாகவைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார். சொந்தக் கட்சியினரிடமே தனது சாகசவித்தையைக் காட்டும் வைகோ, எல்.கணேசனும், செஞ்சி ராமச்சந்திரனும் அவர் மீதுகூறி வரும் குற்றச்சாட்டுக்களுக்குப் பதில் அளிக்கத் திராணியிறி தனது பாய்ச்சலைதிமுக தலைவர் மீது காட்டி வருகிறார்.
மதிமுக ஒரு செத்த பாம்பு. அதை அடிக்க ஒரு தடி தேவையில்லை. திமுகவுக்கும்அப்படிப்பட்ட அவசியம் இல்லை. திமுக மீது குற்றம் சாட்டுவதன் மூலம் தன் மீதுள்ளகறைகளை மறைக்கப் பார்க்கிறார் வைகோ.
நிழலோடு சண்டை போடுவதைப் போல, மதிமுகவுக்கும் தன் தலைமைஅலுவலகத்திற்கும் ஏதோ ஆபத்து வந்து விட்டதைப் போல தன்னுடன் இருக்கும் ஒருசில தொண்டர்களை சூடேற்றிப் பார்த்தார் வைகோ.
பின்னர் மத்திய அரசே தலையிட்டு திமுக அரசினை எச்சரிக்கை செய்ததாக ஒருபொய்யைப் பரப்பினார். அந்தப் பொய்யை மறுத்து காங்கிரஸ் தலைமை அறிக்கைவெளியிட்ட பிறகு தனது பேச்சை வெளியிட்ட வாரப் பத்திரிக்கை தவறு செய்துவிட்டதாக பல்டி அடித்தார்.
வைகோவின் இந்த அநாகரீக பிரசாரத்தை வன்மையாக கண்டிக்கிறேன் என்றுகூறியுள்ளார் ஆற்காடு வீராசாமி.
வீடு திரும்பினார் ஸ்டாலின்-3 வாரம் ஓய்வு
இந் நிலையில் முதுகு வலி காரணமாக சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த உள்ளாட்சித் துறை அமைச்சர் ஸ்டாலின்குணமடைந்து வீடு திரும்பினார். 3 வாரங்களுக்கு அவர் ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
ஸ்டாலினுக்கு சில தினங்களுக்கு முன் முதுகுப் பகுதியில் சதைப் பிடிப்பு ஏற்பட்டதால் கடும் முதுகு வலி ஏற்பட்டது. இதையடுத்து ராமச்சந்திராமருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.
இந்த நிலையில் சிகிச்சை முடிந்து ஸ்டாலின் வீடு திரும்பினார். ஓய்வில் இருப்பதால் 3 வாரங்களுக்கு ஸ்டாலினைப் பார்க்க வர வேண்டாம் என திமுகவினருக்குஅக்கட்சியின் பொருளாளர் ஆற்காடு வீராசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications