ஓடையில் கவிழ்ந்த பேருந்து: பஸ்சுக்குள்புகுந்த பாம்புகள்-பயந்து அலறிய பயணிகள்!

Subscribe to Oneindia Tamil

பண்ருட்டி:பண்ருட்டி அருகே அரசு பேருந்து ஓடையில் கவிழ்ந்து விழுந்தது. இதையடுத்துதண்ணீரில் இருந்த பாம்புகள் பேருந்துக்குள் புகுந்ததால் அதில் சிக்கிக் கொண்டபயணிகள் பயந்து அலறியபடி வெளியே குதித்து தப்பினர்.

சென்னையிலிருந்து நெய்வேலிக்கு சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து அதிகாலைசுமார் மூன்றரை மணியளவில் பண்ருட்டியை அடுத்த கண்டரக்கோட்டை என்றஇடத்தில் சென்றபோது எதிரே ஒரு லாரி மிக வேகமாக வந்தது.

லாரி மீது மோதி விடாமல் இருப்பதற்காக பேருந்து ஓட்டுனர் முகம்மது இலியாஸ்,சடன் பிரேக் போட்டார். அப்போது நிலைதடுமாறிய பஸ் அருகே இருந்த ஓடையில்கவிழ்ந்தது.

இதில் 30 பயணிகள் பஸ்ஸோடு ஓடைக்குள் விழுந்தனர். அந்த ஓடையில் ஏராளமானதண்ணீர் பாம்புகள் ஏராளமான இருந்தன. இந்த பாம்புகள் பேருந்து விழுந்தவேகத்தில் மேலே வந்தன. பஸ்சுக்குள் புகுந்து பயணிகளை உரசிச் சென்றன.

ஏற்கனவே பஸ் கவிழ்ந்த அதிர்ச்சியில் இருந்த பயணிகளை இந்த பாம்புகள் மேலும்பீதியேற்றவே பயணிகள் அலறினர்.

இதையடுத்து அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பேருந்தில் சிக்கிக் கொண்ட பயணிகளைமீட்டனர். இந்த சம்பவத்தில் 5 பேர் படுகாயமடைந்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+