கோவையில் விதிகளை மீறிய கட்டடங்கள் இடிப்பு

Subscribe to Oneindia Tamil

கோவை:கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ள கட்டடங்களை இடிக்கும்பணி மிக பலத்த பாதுகாப்புக்கு இடையே இன்று தொடங்கியது.

சுமார் 573 கட்டடங்கள் விதிமுறைகளை மீறியுள்ளதாகவும், இதில் 41 கட்டடங்கள் மிக மிகப் பழமையானவைஎன்பதால் அவற்றை இடிக்க மாநகராட்சி முடிவு செய்தது. அதே போல 460 கட்டடங்கள் பாதுகாப்பில்லாதவகையில் உள்ளதாலும், 72 கட்டடங்கள் தீ விபத்து நேர்ந்தால் தப்ப முடியாத அளவுக்கு குறுகலாககட்டப்பட்டுள்ளதாலும் இடித்துத் தள்ள முடிவு செய்யப்பட்டது.

இந்த கட்டடங்களை இடித்துவிடுமாறு அதன் உரிமையாளர்களுக்கு 3 முறை நோட்டீஸ் அனுப்பியும்பலனில்லாமல் போனதால், கட்டடங்களை மாநகராட்சியே இடிக்கும் என மாநகராட்சியின் ஆணையர்முத்துவீரன் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து இன்று காலை கோவை கிராஸ் கட் ரோட்டில் உள்ள கட்டடத்தின் 6வது மாடியை இடிக்கும் பணிதொடங்கியது. அங்கு போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளனர். போக்குவரத்தும் வேறு பாதையில்திருப்பிவிடப்பட்டுள்ளு. இந்தக் கட்டடத்தில் வாகன நிறுத்தத்துக்கு இடமே இல்லாததால் இடிக்கப்படுவதாகஅறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து விதிமீறல் கட்டடங்கள் இடிக்கப்படும் என மாநகராட்சி அறிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+